அருள்மிகு கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாத மற்றும் கௌமாரிஅம்மன் திருக்கோயில், கம்பம் - 625516, தேனி .
Arulmigu Kambarayaperumal Kasivishwanatha Temple, Cumbum - 625516, Theni District [TM032288]
×
Temple History
தல வரலாறு
கம்பம் ஒரு பழமையான நகரம்
கம்பம் நகரின் அருகில் ஓடும் முல்லையாறு, சுரபி என்னும் சுருளியாறு ஆகியவை கம்பம் நகரை வளம் கொழிக்க செய்கின்றன
கம்ப நாயக்கன், உத்தம நாயக்கன் என்ற இரு அரசர்கள் ஆட்சி செய்த பகுதியாதலால் இவ்வூருக்கு கம்பம் என்றும் உத்தமபுரம் என்றும் பெயர் வந்தது.
விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட சம்பணர் என்ற மன்னர் தமிழ்நாட்டின் தென் பகுதியில் கம்பம் மீது கி.பி 1374ல் படையெடுத்து விஜய நகர ஆட்சியின் கீழ் மதுரையை ஆட்சி செய்த விஸ்வநாத நாயக்கர் தனது படை தளபதி ராமபத்திர நாயக்கரை அனுப்பி கம்பம், கூடலூர் பகுதியை ஆண்ட சோழ மன்னரிடமிருந்து இப்பகுதியை கைப்பற்ற ஒரு பெரும் போர் ஏற்பட்டது சோழ மன்னனை போரில் வென்று...கம்பம் ஒரு பழமையான நகரம்
கம்பம் நகரின் அருகில் ஓடும் முல்லையாறு, சுரபி என்னும் சுருளியாறு ஆகியவை கம்பம் நகரை வளம் கொழிக்க செய்கின்றன
கம்ப நாயக்கன், உத்தம நாயக்கன் என்ற இரு அரசர்கள் ஆட்சி செய்த பகுதியாதலால் இவ்வூருக்கு கம்பம் என்றும் உத்தமபுரம் என்றும் பெயர் வந்தது.
விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட சம்பணர் என்ற மன்னர் தமிழ்நாட்டின் தென் பகுதியில் கம்பம் மீது கி.பி 1374ல் படையெடுத்து விஜய நகர ஆட்சியின் கீழ் மதுரையை ஆட்சி செய்த விஸ்வநாத நாயக்கர் தனது படை தளபதி ராமபத்திர நாயக்கரை அனுப்பி கம்பம், கூடலூர் பகுதியை ஆண்ட சோழ மன்னரிடமிருந்து இப்பகுதியை கைப்பற்ற ஒரு பெரும் போர் ஏற்பட்டது சோழ மன்னனை போரில் வென்று இங்கு கோட்டைக்குள்ளே காசி விஸ்வநாதருக்கும், கம்பராயப்பெருமாளுக்கும் கோவிலை கட்டினார். அதாவது இத்திருக்கோவில்கள் கி.பி 1374க்கு பிறகு கட்டப்பட்டிருப்பது தெளிவாகிறது. திருக்கோவிலை சுற்றி பெரிய கோட்டைகளை கட்டி, அதில் போர் படையினர் தங்குவதற்கு முன் பகுதியில் கட்டிடங்கள் கட்டியும்,கட்டிடங்கள் மீது எதிரிகளை கண்காணிக்க உயர் கோபுரங்களையும் கட்டினார். காலப்போக்கில் கோட்டை சுவர்களும், குளமும் அழிந்துவிட்டது. மேற்கூறிய கூற்றின்படி கம்ப நாயக்கர், உத்தம நாயக்கர் ஆகிய இரு சகோதரர்களின் ஆட்சியின் கீழ் இவ்விரு பகுதிகளும் இருந்ததால், அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோவில் கருவறையின் சரிபாதி கம்பம் கிராமத்திலும், மற்றொரு பாதி உத்தமபுரம் கிராமத்திலும் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது
மேலும் கம்பம் நகரின் மையப்பகுதியில் வடபுறம் காசிவிஸ்வநாதரையும், தென்புறம் கம்பராயப்பெருமாளையும் முன்னிறுத்தி கிழக்கு நோக்கி இவ்விரு திருக்கோவில்களுக்கு ஒரே வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.