தல வரலாறு
அருள்மிகு முத்துக்கருப்பணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ள இக்குன்றின் மீது கரட்டின் மீதுஒரு சிவன் கோயில் இருந்ததாகவும், அருள்மிகு சிவனுக்கு முத்துக்கருப்பணசுவாமி காவலராக இருந்ததாகவும்,மந்திரவாதி ஒருவன் தனது மந்திர சக்தியால் அருள்மிகு சிவனைக் கவர்ந்து செல்ல முயன்றதாகவும், அப்போது முத்துக்கருப்பணசுவாமி அவனைத் தடுத்து வதம் செய்ததாகவும், மந்திரவாதியை வதம் செய்த பின்னர் முத்துக்கருப்பணசுவாமி குன்றின் அடிவாரத்திலேயே காவல் தெய்வமாக நிரந்தரமாகவே தங்கிவிட்டார் என்றும், காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோயில் மறைந்து போனதாகவும்,பின்னர் முத்துக்கருப்பணசுவாமியே மக்களிடம் பிரசித்தி பெற்றுவிட்டார் என்றும்,பக்தர்களால் இவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டதாகவும் குன்றின் அடிவாரத்தில் பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர் பாறையடி...தல வரலாறு
அருள்மிகு முத்துக்கருப்பணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ள இக்குன்றின் மீது கரட்டின் மீதுஒரு சிவன் கோயில் இருந்ததாகவும், அருள்மிகு சிவனுக்கு முத்துக்கருப்பணசுவாமி காவலராக இருந்ததாகவும்,மந்திரவாதி ஒருவன் தனது மந்திர சக்தியால் அருள்மிகு சிவனைக் கவர்ந்து செல்ல முயன்றதாகவும், அப்போது முத்துக்கருப்பணசுவாமி அவனைத் தடுத்து வதம் செய்ததாகவும், மந்திரவாதியை வதம் செய்த பின்னர் முத்துக்கருப்பணசுவாமி குன்றின் அடிவாரத்திலேயே காவல் தெய்வமாக நிரந்தரமாகவே தங்கிவிட்டார் என்றும், காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோயில் மறைந்து போனதாகவும்,பின்னர் முத்துக்கருப்பணசுவாமியே மக்களிடம் பிரசித்தி பெற்றுவிட்டார் என்றும்,பக்தர்களால் இவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டதாகவும் குன்றின் அடிவாரத்தில் பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர் பாறையடி முத்தையா என்ற திருப்பெயரில் அழைக்கப்படுவதாகவும் இத்திருக்கோயிலின் தல வரலாறாக கூறப்படுகிறது.
இத்திருக்கோயிலுக்குப் பின்புறமுள்ள குன்றின்மேல் சதுர பீடத்துடன் கூடிய ஆகாய லிங்கமாக சிவன் காட்சி தருகிறார். அருகில் பார்வதி தேவி மண்டியிட்டு மலருடன் சிவபூஜை செய்கிறாள்.இந்தக் கோலத்தை காண்பது அரிது எனக் கூறப்படுகிறது. குன்றின் அடியில் வற்றாத பாறையடி தீர்த்தம் உள்ளது.
மூலவரான அருள்மிகு முத்துக்கருப்பணசுவாமியின் முகம்,மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதால் அப்பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்ற ஐதீகத்தால் விசிறியால் வீசி விடப்படுகிறது.
காலையில் கோயில் நடை திறக்கும் முன்பாக, பூசாரி சன்னதியின் கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டிவிட்டு அதன் பின்னரே சன்னதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்று திறக்க வேண்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இவ்வாறு செய்யப்படுகிறது.
இத்திருக்கோயிலுக்கு பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் திருப்பணி மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு 1992-ம் ஆண்டு வாக்கில் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1997-ம் ஆண்டில் நிறைவடந்து தமிழ் ஈஸ்வர ஆண்டு ஆவணி மாதம் 20-ம் தேதியில் ஆங்கில தேதி 05.09.1997 வெள்ளிக்கிழமையன்று இத்திருக்கோயிலுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது.
திருக்கோயில் பூஜை விபரம்
இத்திருக்கோயிலில் பிரதி தினமும் காலை 8.00 மணி முதல் 12.00 வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். காலை 8.00 மணியிலிருந்து 8.30 மணுக்குள் தேங்காய், பழம், நிவேதனம் வைத்து ஒரு கால பூஜை நடைபெறுகிறது. மூலவரது சிலை நவபாஷாணத்தால் ஆனதால், மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. இவரது உக்கிரத்தை குறைக்கும் விதமாக அமாவாசையன்று நிழலில் உலர்த்திய தர்ப்பையை நெருப்பில் எரித்து கிடைக்கும் சாம்பலுடன் கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது, அத்தர்,புனுகு,பச்சைக்கற்பூரம் மற்றும் ஐந்து வகை எண்ணெய் சேர்த்து தயாரித்த கலவையைக் கொண்டு தைலக்காப்பு செய்யப்படுகிறது.பௌர்ணமியன்று வெண்ணெய் காப்பு செய்யப்படுகிறது.தைலக்காப்பு சாத்தப்படும் சமயத்தில் சுவாமி உக்கிரமாக இருப்பார் என்ற ஐதீகம் காரணமாக சன்னதிக்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனுமதிப்பதில்லை.
ஆண்டுதோறும் தமிழ் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று நள்ளிரவில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் சிவராத்திரியன்று நள்ளிரவில் படையல் வைத்து பூஜை செய்து முடித்த பிறகு, இத்திருக்கோயில் மூலவரான அருள்மிகு முத்துக்கருப்பணசுவாமி, அருள்மிகு வீரபத்திரசுவாமிக்கு,தேங்காய், பழம், சர்க்கரைப் பொங்கல், பயறு வகைகள் முதலியவைகளை படையலாக படைத்து சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.