அருள்மிகு முத்துக்கருப்பணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ள இக்குன்றின் மீது கரட்டின் மீதுஒரு சிவன் கோயில் இருந்ததாகவும், அருள்மிகு சிவனுக்கு முத்துக்கருப்பணசுவாமி காவலராக இருந்ததாகவும்,மந்திரவாதி ஒருவன் தனது மந்திர சக்தியால் அருள்மிகு சிவனைக் கவர்ந்து செல்ல முயன்றதாகவும், அப்போது முத்துக்கருப்பணசுவாமி அவனைத் தடுத்து வதம் செய்ததாகவும், மந்திரவாதியை வதம் செய்த பின்னர் முத்துக்கருப்பணசுவாமி குன்றின் அடிவாரத்திலேயே காவல் தெய்வமாக நிரந்தரமாகவே தங்கிவிட்டார் என்றும், காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோயில் மறைந்து போனதாகவும்,பின்னர் முத்துக்கருப்பணசுவாமியே மக்களிடம் பிரசித்தி பெற்றுவிட்டார் என்றும்,பக்தர்களால் இவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டதாகவும் குன்றின் அடிவாரத்தில் பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர் பாறையடி முத்தையா என்ற திருப்பெயரில் அழைக்கப்படுவதாகவும் இத்திருக்கோயிலின் தல வரலாறாக கூறப்படுகிறது. ...