Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், Karaikudi - 630001, சிவகங்கை .
Arulmigu Muthalamman Temple, Karaikudi - 630001, Sivagangai District [TM035726]
×
Temple History

தல வரலாறு

கிழக்கு முகம் பார்த்த கோவில் ஆகும் . கிழக்கு நோக்கி ஒரே பீடத்தில் புற்றுமண்ணால் ஐந்து புற்றுஉருவம் வைத்து முத்தாலம்மனுக்கு மூலகருவரை , முத்தாலம்மன் மனோன்மணி சக்தி , இச்சாசக்தி , க்ரியாசக்தி ஞானசக்தி என்ற பெயரால் வழங்கப்படுகிறது . வடக்கு நோக்கி ஒரே பீடத்தில் முத்துப்பேச்சி முத்துராக்கச்சி என்ற பெயருடன் புற்றுமண்ணால் செய்த மூலகருவரை முத்தாலம்மனுக்கு எதிரில் பஞ்சபீடமும் பலிபீடமான முன்னோடி கருப்பர் அணைத்து முலகருவறைகளும் வெட்டவெயிலில் கருவறையாக அம்மைக்கப்பட்டு உள்ளது .உலகம் இயங்குவதற்கு பஞ்சபூதங்களை மூலகாரணமாக ஆகும் . முத்தாலம்மனையும் பஞ்சபூத சக்தியாக உருவாக்கி இருப்பது சிறப்பான நிலையாகும் .

தல பெருமை

காரைக்குடியில் தோன்றிய காலம் முதல் காரைக்குடி அருகில் காரைக்குடியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பழைய செஞ்சை என்று சொல்லக் கூடிய ஊற்றான் கொள்ளை என்ற இடத்தில் பத்மசாலியர் சேனியர் சமூகத்தார்களால் ஸ்தானிகம் செய்து இந்த அம்மனை வணங்கி வந்தனர். இத்திருக்கோயில் கருவறை வெட்ட வெளியில் அமைந்து சுற்றிவர மண்டபங்கள் உள்ளது. திருக்கோயில் ஆலய உட்பிரகாரத்தில் பேச்சியம்மன், ராக்காச்சிஅம்மன், ஒரு பீடத்திலும் முத்துக்கருப்பர் , வீரப்பத்திர சுவாமி ஒரு பீடமாகவும் முன்னோடியான் ஒரு பீடமாகவும் பரிவார துவார சக்திகள் தனி சன்னதியாகவும் ஆகிய தெய்வங்களும் வெட்ட வெளியில் அமைந்துள்ளது, இவைகளை சுற்றிலும் மண்டபங்கள் எழுப்பட்டுள்ளன.கிழக்கு முகம் பார்த்த கோவிலாகும். கிழக்கு நோக்கி ஒரே பீடத்தில் புற்றுமண்ணால் ஐந்து புற்று உருவம் வைத்துமுத்தாளம்மனுக்கு...