காரைக்குடியில் தோன்றிய காலம் முதல் காரைக்குடி அருகில் காரைக்குடியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பழைய செஞ்சை என்று சொல்லக் கூடிய ஊற்றான் கொள்ளை என்ற இடத்தில் பத்மசாலியர் (சேனியர் ) சமூகத்தார்களால் ஸ்தானிகம் செய்து இந்த அம்மனை வணங்கி வந்தனர். இத்திருக்கோயில் கருவறை வெட்ட வெளியில் அமைந்து சுற்றிவர மண்டபங்கள் உள்ளது. திருக்கோயில் ஆலய உட்பிரகாரத்தில் பேச்சியம்மன், ராக்காச்சிஅம்மன், ஒரு பீடத்திலும் முத்துக்கருப்பர் , வீரப்பத்திர சுவாமி ஒரு பீடமாகவும் முன்னோடியான் ஒரு பீடமாகவும் பரிவார துவார சக்திகள் தனி சன்னதியாகவும் ஆகிய தெய்வங்களும் வெட்ட வெளியில் அமைந்துள்ளது, இவைகளை சுற்றிலும் மண்டபங்கள் எழுப்பட்டுள்ளன.கிழக்கு முகம் பார்த்த கோவிலாகும். கிழக்கு நோக்கி ஒரே பீடத்தில் புற்றுமண்ணால் ஐந்து புற்று உருவம் வைத்துமுத்தாளம்மனுக்கு...