அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில், Devakottai - 630302, சிவகங்கை .
Arulmigu Silambanichidambara Vinayagar Temple, Devakottai - 630302, Sivagangai District [TM035730]
×
Temple History
தல பெருமை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் மற்றும் வட்டம், அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில் சிலம்பணி ஊரணியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் சாலகோபுரம், அதன் முன்பு மூன்று நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவர் காலில் சிலம்பு அணிந்திருப்பதால் சிலம்பணி சிதம்பர விநாயகர் என்று பெயர் அமைந்துள்ளது. சன்னதியின் பின்புறம் உற்சவர் சன்னதி மற்றும் வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. விநாயகர் சன்னதி முன்பு இடது புறத்தில் நவக்கிரகம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் விநாயகர் சன்னதி முன்பு இடதுபுற தூணில் உள்ள தண்டபாணி மிகவும் விஷேமானது தண்டபாணியை வழிபட்டால் பழநி சென்று தண்டபாணி தரிசனம் செய்த வந்த பலன் உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை...சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் மற்றும் வட்டம், அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில் சிலம்பணி ஊரணியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் சாலகோபுரம், அதன் முன்பு மூன்று நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவர் காலில் சிலம்பு அணிந்திருப்பதால் சிலம்பணி சிதம்பர விநாயகர் என்று பெயர் அமைந்துள்ளது. சன்னதியின் பின்புறம் உற்சவர் சன்னதி மற்றும் வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. விநாயகர் சன்னதி முன்பு இடது புறத்தில் நவக்கிரகம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் விநாயகர் சன்னதி முன்பு இடதுபுற தூணில் உள்ள தண்டபாணி மிகவும் விஷேமானது தண்டபாணியை வழிபட்டால் பழநி சென்று தண்டபாணி தரிசனம் செய்த வந்த பலன் உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை அதே போல் வலதுபுற தூணில் தவ கோலத்தில் அமைந்துள்ள துர்க்கை மிகவும் விஷேசமானது திருமணம் ஆகாத பெண்கள் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணம் நிச்சயமாகும் என்பது சிறப்பு. மேலும் இத்திருக்கோயிலில் பெண் பார்ப்பது, திருமணம் நிச்சயம் செய்வது சுற்று வட்டார கிராம மக்களின் பிராத்தனையாக இருந்து வருகிறது. வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் சன்னதியில் திருமணம் செய்வது சிறப்பு. ஆலயத்தின் அருகில் மூன்று வளைவுகள் சுமார் 200 அடியில் அமைந்துள்ளது. மிகவும் அழகாக தேற்றமளிக்கிறது. இந்த வளவுகள் தேவகோட்டை நகராட்சியின் சின்னமாக விளங்குகிறது. தமிழ் மாதம் ஐப்பசி முதல் மற்றும் நிறைவு தேதியில் ஆற்றறில் தீர்த்தமாடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும் பெருமளவில் பக்தர்கள் காண வருவார்கள். ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் வெளி வீதியுலா சிறப்பாக இருக்கும். மேலும் மார்கழி மாதம் பிள்ளையார் நோம்பு அன்று நகரத்தார்கள் இவ்வாலய விநாயகர் தரிசனம் செய்து திரிநூல் வாங்கினால் தான் ஆண்டு முழுவதும் பிணியின்றி இருக்கலாம் என்பது ஐதீகமாக விளங்குகிறது. இத்திருக்கோயில் விநாயகரை பணக்கார விநாயகர் என்று அழைப்பார்கள். இந்த தெய்வத்தின் மீது ஆழ்ந்த பக்தி பூண்டவர்கள் சகல சம்பத்துடன் வாழ்வார் என்பது பக்தர்களின் ஆணித்தரமான நம்பிக்கை அதுபோல விநாயகர் மீது அன்பு வைத்து முழு நம்பிக்கையுடன் வழிபட்டால் தங்கள் வாழ்வில் நினைத்த காரியம் கைகூடும்