சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் மற்றும் வட்டம், அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில் சிலம்பணி ஊரணியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் சாலகோபுரம், அதன் முன்பு மூன்று நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவர் காலில் சிலம்பு அணிந்திருப்பதால் சிலம்பணி சிதம்பர விநாயகர் என்று பெயர் அமைந்துள்ளது. சன்னதியின் பின்புறம் உற்சவர் சன்னதி மற்றும் வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. விநாயகர் சன்னதி முன்பு இடது புறத்தில் நவக்கிரகம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் விநாயகர் சன்னதி முன்பு இடதுபுற தூணில் உள்ள தண்டபாணி மிகவும் விஷேமானது தண்டபாணியை வழிபட்டால் பழநி சென்று தண்டபாணி தரிசனம் செய்த வந்த பலன் உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை...