அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், Ariyakkudi - 630202, சிவகங்கை .
Arulmigu Thiruvengatamudayan Temple, Ariyakkudi - 630202, Sivagangai District [TM035733]
×
Temple History
தல வரலாறு
அாியக்குடியில் வாழ்ந்து வந்த பெரும் தனவணிகரான நகரத்தார் பெருமகனார் அழகிய வாணப்ப செட்டியார் பேரனும் முருகப்ப செட்டியாாின் ஐந்தாவது புதல்வனுமாகிய சேவுகன்செட்டியார் ஈத்துவக்கும் இன்பமே போின்பம் என்று வாழ்ந்து வந்தார். இந்த முருகன் செட்டி சேவுகன் செட்டி என்பவரே பெருமாளை நோில் கண்ட பெருமகனாவார். அருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்பதை நன்கறிந்த சேவுகன் செட்டியார் அவர்கள் ஆண்டவன் அருட்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தொடங்கினார்கள். பக்தர்கள் பலர் தீராத நோய்களையும் சேவுகன் செட்டியாரைத் தாிசித்து போக்கிக் கொண்டனர். திருவேங்கடமுடையானுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை இவரது உண்டியலிலேயே செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அவ்வுண்டியலை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு நடந்து சென்று உண்டியல் காணிக்கைகளை சமர்ப்பித்து வந்தார்கள். மூப்பெய்திய காலத்தில் ஒருநாள் பொியவர் தலையில் காணிக்கை...அாியக்குடியில் வாழ்ந்து வந்த பெரும் தனவணிகரான நகரத்தார் பெருமகனார் அழகிய வாணப்ப செட்டியார் பேரனும் முருகப்ப செட்டியாாின் ஐந்தாவது புதல்வனுமாகிய சேவுகன்செட்டியார் ஈத்துவக்கும் இன்பமே போின்பம் என்று வாழ்ந்து வந்தார். இந்த முருகன் செட்டி சேவுகன் செட்டி என்பவரே பெருமாளை நோில் கண்ட பெருமகனாவார். அருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்பதை நன்கறிந்த சேவுகன் செட்டியார் அவர்கள் ஆண்டவன் அருட்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தொடங்கினார்கள். பக்தர்கள் பலர் தீராத நோய்களையும் சேவுகன் செட்டியாரைத் தாிசித்து போக்கிக் கொண்டனர். திருவேங்கடமுடையானுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை இவரது உண்டியலிலேயே செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அவ்வுண்டியலை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு நடந்து சென்று உண்டியல் காணிக்கைகளை சமர்ப்பித்து வந்தார்கள். மூப்பெய்திய காலத்தில் ஒருநாள் பொியவர் தலையில் காணிக்கை உண்டியலைச் சுமந்து கொண்டு மலையேறிச் செல்லும் வழியில் மயக்கமுற்று விழுந்துவிடவே பக்தனின் பக்தியில் பரவசமடைந்த எம்பெருமான் சேவுகன் செட்டியார்முன் தோன்றி தள்ளாத வயதில் இனி மலையேறி வரவேண்டாம் என்றும் பக்தன் இருக்கும் இடம் தேடி தான் வருவதாகவும் அருள்செய்து அாியக்குடிக்கு செட்டியார் திரும்பும் போது எவ்விடத்தில் நான்கு பக்கமும் முளையடித்து நடுவில் உடைத்த தேங்காயும், துளசியும்,குங்குமமும் இருக்கின்றதோ அவ்விடத்தில் எம்பெருமானை ஆவாஹனம் செய்து, வழிபட்டு, காணிக்கைகளையும் செலுத்தி வந்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும் என அருளினார். அன்றிலிருந்து அாியக்குடி என்றும் தென்திருப்பதி எம்பெருமான் உறையும் திருத்தலமாயிற்று. ஸ்ரீதேவி மற்றும் புதேவி உடன் திருவேங்டமுடையான் இங்கு அருள்புாிந்து வருகிறார்.
தல பெருமை
இத்திருத்தலத்தில் வாழ்ந்த சேவகன் செட்டியார் என்ற நகரத்தார் திருமகனார் திருமலை திருவேங்கடமுடையான் மீது அதீத பற்று கொண்டிருந்தார் வருடம் தோறும் இத் திருத்தலத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு நடந்தே சென்று உண்டியல் காணிக்கைகளை செலுத்தி வந்தார் தள்ளாத வயதில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலை ஏறி செல்லும் வழியில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் அப்பொழுது அவர் முன் திருப்பதி திருவேங்கடமுடையான் தோன்றி தள்ளாத வயதில் இனி நீ மலை ஏறி வர வேண்டாம் பக்தன் இருக்கும் இடத்திற்கு நான் வருகிறேன் எனக் கூறி மறைந்தார் பெருமகனார் ஊர் திரும்பிய போது அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள் நாளை நீ மேற்கே செல் என் இருப்பிடம்...இத்திருத்தலத்தில் வாழ்ந்த சேவகன் செட்டியார் என்ற நகரத்தார் திருமகனார் திருமலை திருவேங்கடமுடையான் மீது அதீத பற்று கொண்டிருந்தார் வருடம் தோறும் இத் திருத்தலத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு நடந்தே சென்று உண்டியல் காணிக்கைகளை செலுத்தி வந்தார் தள்ளாத வயதில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலை ஏறி செல்லும் வழியில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் அப்பொழுது அவர் முன் திருப்பதி திருவேங்கடமுடையான் தோன்றி தள்ளாத வயதில் இனி நீ மலை ஏறி வர வேண்டாம் பக்தன் இருக்கும் இடத்திற்கு நான் வருகிறேன் எனக் கூறி மறைந்தார் பெருமகனார் ஊர் திரும்பிய போது அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள் நாளை நீ மேற்கே செல் என் இருப்பிடம் தெரியும் என்றார் அதன்படி மறுநாள் அவர் நடந்து சென்ற போது தற்போது கோயில் இருக்கும் இடத்தில் ஒரு துளசி தேடியும் தேங்காய் காலாஞ்சியும் இருந்தன அந்த இடத்தின் மேலே கருடன் வட்டமிட்டு கொண்டிருந்தது இடத்தை சுட்டிக் காட்டியது அந்த இடத்தில் கோவில் கட்ட நிலத்தை சீர் செய்த போது தற்போது மூலவர் சிலை நிலத்தின் அடியில் இருந்து கிடைத்தது திருப்பதியைப் போன்று பெருமாளை தனியாக நிறுவ விரும்பாது ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திருவேங்கடமடையானை பிரதிஷ்டை செய்தார் பெருமாளின் உற்சவ விக்கிரகமாக ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமானுஜர் காலத்தில் அவருடைய திருக்கையினால் ஆராதனம் செய்த ஸ்ரீனிவாச பெருமாளினை இத்தளத்திற்கு கொண்டு வந்தார் திருப்பதியில் இருந்து ஸ்ரீ சடாரியும் திருமயத்தில் இருந்து அக்னியும் கொண்டுவர பெற்று திருவேங்கடமுடையான் திருக்கோயில் திருப்பணி சேவகன் செட்டியார் செய்து முடித்தார் அன்று முதல் இத்திருத்தலம் தென்திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது திருப்பதிக்கு வேண்டிய பிரார்த்தனைகளை இங்கே செலுத்தலாம் திருப்பதியில் இருந்து திருவேங்கடமுடையானம் ஸ்ரீரங்கத்தில் இருந்து சீனிவாச பெருமாளும் இந்த ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பதால் இத்திருத்தலத்திற்கு வந்து பெருமாளை சேவித்தால் திருமலை திருப்பதி ஸ்ரீரங்கம் போன பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது இத்தளத்தில் திருவேங்கடமுடையானை பிரார்த்தனை செய்பவர்களுக்கு தீராத நோய்கள் எல்லாம் தீர்த்து வைக்கிறார் திருமணம் வாய்ப்பு தள்ளிப் போகிறவர்களுக்கு திருமணங்கள் கூடிய விரைவில் நடைபெறும் குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும் இத்தளத்தில் திருப்பதி திருச்சானூரில் எழுந்து எழுந்தருளி இருக்கும் பத்மாவதி தாயார் தனி சன்னதியில் காட்சி தருகிறார் மகாலட்சுமியின் அவதாரமான பத்மாவதி தாயாரை பிரார்த்தனை செய்வதன் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நமது குடும்பத்திற்கு வந்து சேரும் என்று தலபுராணம் கூறுகிறது இத்திருத்தலத்தில் உள்ள ஈசானிய மூலையில் இருக்கும் அதிசய கருட பகவான் வேண்டியவர்களுக்கு வேண்டினவற்றை நினைத்த மாத்திரத்திலேயே நடத்தி முடித்து கொடுக்கிறார் இக்கருட பகவானுக்கு சிதறு தேங்காய் பிரார்த்தனையாக உடைக்கப்படுகிறது