அருள்மிகு ஆதினமிளகிய அய்யனார், திருக்கோயில், Iravuseri - 630302, சிவகங்கை .
Arulmigu Aathinamilakiya Iyanar Temple, Iravuseri - 630302, Sivagangai District [TM035736]
×
Temple History
தல பெருமை
மேற்படி திருக்கோவில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.
அருள்மிகு ஆத்மனாகிய அய்யனார் மற்றும் பூர்ணகலா புஷ்பகலா உடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர் , தண்டாயுதபாணி , மஹாலட்சுமி மற்றும் பைரவர் சன்னதி அமைந்துள்ளது.
காளியம்மன் சிலை தேவகோட்டை விரிசிலை ஆற்றங்கரை அருகில் உள்ள நிலத்தை உழுது வரும் பொழுது பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் அவற்றை மேற்படி கோவிலில் வடக்கு பார்த்து சன்னதி அமைத்து பிரதிவுடை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேற்படி சன்னதிக்கு அருகில் நொண்டிகருப்பன் , பெரிய கருப்பன் , பேச்சியம்மன் , சந்ததிகள் வடக்கு பார்த்து உள்ளது.
இத்திருக்கோவில் தேவகோட்டை நகர் இறகுசேரி பகுதியில் அமைந்துள்ளது. இராவணன் சீதா பிராட்டியாரை சிறை பிடித்து புஷ்பக விமானத்தில்...மேற்படி திருக்கோவில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.
அருள்மிகு ஆத்மனாகிய அய்யனார் மற்றும் பூர்ணகலா புஷ்பகலா உடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர் , தண்டாயுதபாணி , மஹாலட்சுமி மற்றும் பைரவர் சன்னதி அமைந்துள்ளது.
காளியம்மன் சிலை தேவகோட்டை விரிசிலை ஆற்றங்கரை அருகில் உள்ள நிலத்தை உழுது வரும் பொழுது பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் அவற்றை மேற்படி கோவிலில் வடக்கு பார்த்து சன்னதி அமைத்து பிரதிவுடை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேற்படி சன்னதிக்கு அருகில் நொண்டிகருப்பன் , பெரிய கருப்பன் , பேச்சியம்மன் , சந்ததிகள் வடக்கு பார்த்து உள்ளது.
இத்திருக்கோவில் தேவகோட்டை நகர் இறகுசேரி பகுதியில் அமைந்துள்ளது. இராவணன் சீதா பிராட்டியாரை சிறை பிடித்து புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு இப்பகுதி வழியாக செல்லும் பொழுது சடாயு என்கிற பறவை வழிமறித்து தடுத்ததால் இராவணன் அதன் இறகை தனது வாளால் வெட்டியதில் , அதன் இறகு இப்பகுதியில் விழுந்த காரணத்தினால் இதற்கு இறகுசேரி என்று பெயரிடப்பட்டதாகவும் , காலப்போக்கில் இரவுசேரி என்ற பெயரில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இத்திருக்கோவிலில் உள்ள அய்யனார் , காளியம்மன் மற்றும் கருப்பன் ஆகிய தெய்வங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருவதாகவும் நம்பப்படுகிறது.
இத்திருக்கோவில் வருடா வருடம் மாசி மாதம் மகா சிவராத்திரி விஷேடம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேற்படி விசேடத்தன்று இதனை குலதெய்வமாக வழிப்படுபவர்களும் , தேவகோட்டை நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் சேவார்த்திகள் வருகை தந்து தங்களது பிரார்தனைகைளை செலுத்தி வருகின்றனர்.