தல வரலாறு

அருள்மிகு சிவதொண்டர் பெரியபெருமாள் திருக்கோயில் வெளியாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஸ்ரீபெரிய பெருமாள் திருக்கோயில் விளம்பி தமிழ் ஆண்டுக்கான விஷேச தலமாகும். மூத்த திருமால் மூர்த்தியாக மஹாவிஷ்ணுவையும் மஹரிஷிகள் வெளியாத்தூரில் தரிசித்தமையால் பெரியபெருமாள் பெத்த பெருமாள் என்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் பெத்தாச்சி, பெத்தபெருமாள் என பெயர் கொள்வோரும் உண்டு.