அருள்மிகு சிவா விஷ்ணு திருக்கோயில், தி. நகர் பேருந்து நிலையம், சென்னை - 600017, சென்னை .
Arulmigu Sivavishnu Temple, T.Nagar Bus Stand, Chennai - 600017, Chennai District [TM000372]
×
Temple History
தல வரலாறு
1932 ஆண்டு காஞ்சிபுரம் ஜகதகுரு ஸ்ரீ சங்கராச்சாரி அவர்களின் ஆலோசையின்படி 1935ல் மாம்பலம் சன்மார்க்க சம்வர்தினி சபா ஆரம்பிக்கப்பட்டு சபாவின் முயற்சியால் விநாயகர், சுப்ரமணியர் வள்ளி தெய்வானை, கேதாரீஸ்வரர், பார்வதி அம்பாள், நவகிரகம், ஸ்ரீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர் சன்னதிகள் கட்டப்பட்டு 21.06.1945 அன்று ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலின் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் உத்தரவு சி எ 211/1954 தேதி 2.2.1955ன் படி...1932 ஆண்டு காஞ்சிபுரம் ஜகதகுரு ஸ்ரீ சங்கராச்சாரி அவர்களின் ஆலோசையின்படி 1935ல் மாம்பலம் சன்மார்க்க சம்வர்தினி சபா ஆரம்பிக்கப்பட்டு சபாவின் முயற்சியால் விநாயகர், சுப்ரமணியர் வள்ளி தெய்வானை, கேதாரீஸ்வரர், பார்வதி அம்பாள், நவகிரகம், ஸ்ரீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர் சன்னதிகள் கட்டப்பட்டு 21.06.1945 அன்று ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலின் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் உத்தரவு சி எ 211/1954 தேதி 2.2.1955ன் படி மாம்பலம் சன்மார்க்க சம்வர்தினி சபா ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில் இந்து சமய அறநிலைய துறை சட்டப்பிரிவு 63.பி ன் கீழ் பரம்பரை அறங்காவலர்களாக அங்கீகரிக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட தாயார் சன்னதி 1966இல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. . காஞ்சிபுரம் ஜகதகுரு ஸ்ரீ சங்கராச்சாரி அவர்களின் முன்னணியில் 6.2.1976ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. . புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு அதற்கு 7.4.1985ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதிதாக ராமர் சன்னதி கட்டப்பட்டு 2.9.1990ல் கும்பாபிஷேகம்.நடைபெற்றது..அதற்கு பிறகு மூன்றாவது முறையாக அணைத்து சன்னதிகளுக்குமான மகா கும்பாபிஷேகம் 24.06.2010 ல் நடைபெற்றது