Arulmigu Kasiviswanathaswamy Temple, Tenkasi - 627811, Tenkasi District [TM037880]
×
Temple History
தல வரலாறு
தலவரலாறு
அரிகேசரிபராக்கிரமபாண்டியன் முருகப்பெருமான் அருளால் பெற்ற ககனகுளிகையை வாய்க்குள் அமைத்துக்கொண்டு யார்க்கும் தெரியாமல் வானில்பறந்து காசிக்குச்சென்று காசிவிசுவநாதரை வழிபட்டு சூரியன்உதிக்கும் முன்னர் கோட்டைக்குத் திரும்பிவிடுவார். ஒருசமயம் காசிக்குசென்ற அரிகேசரிபராக்கிரமபாண்டியன் கொண்டுவந்த லிங்கம் அவர் இளைப்பாரிய இடத்தில் இருந்து எடுக்க இயலவில்லை. அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஸ்டை செய்து அதற்கு சிவகாசி என்று பெயரிட்டனர்.
மேற்படி மன்னர் கோட்டைக்கு வந்து மிகுந்தகவலையுடன் இருந்தபோது சிவபெருமான் கனவில்தோன்றி மன்னர் அரண்மனையிலிருந்து, கட்டெறும்பு வரிசையாக ஊர்ந்து எங்கு முடிவடைகிறதோ அந்த இடத்தில் லிங்கம் தோன்றும் ,அந்த இடத்தில் சிவலிங்கத்தை தெய்வீககாட்சியாக கண்டறிந்தார். மேற்படிஇடத்தில் 06.05.1446 ல் கால்கோல் விழா நடத்தி 10.06.1447 ல் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்தார் அதன்பின்னர் மன்னர் பராக்கிரமபாண்டியன் இராஜகோபுரம் கட்ட 30.11.1457 ல் ஆரம்பிக்கப்பட்டு...தலவரலாறு
அரிகேசரிபராக்கிரமபாண்டியன் முருகப்பெருமான் அருளால் பெற்ற ககனகுளிகையை வாய்க்குள் அமைத்துக்கொண்டு யார்க்கும் தெரியாமல் வானில்பறந்து காசிக்குச்சென்று காசிவிசுவநாதரை வழிபட்டு சூரியன்உதிக்கும் முன்னர் கோட்டைக்குத் திரும்பிவிடுவார். ஒருசமயம் காசிக்குசென்ற அரிகேசரிபராக்கிரமபாண்டியன் கொண்டுவந்த லிங்கம் அவர் இளைப்பாரிய இடத்தில் இருந்து எடுக்க இயலவில்லை. அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஸ்டை செய்து அதற்கு சிவகாசி என்று பெயரிட்டனர்.
மேற்படி மன்னர் கோட்டைக்கு வந்து மிகுந்தகவலையுடன் இருந்தபோது சிவபெருமான் கனவில்தோன்றி மன்னர் அரண்மனையிலிருந்து, கட்டெறும்பு வரிசையாக ஊர்ந்து எங்கு முடிவடைகிறதோ அந்த இடத்தில் லிங்கம் தோன்றும் ,அந்த இடத்தில் சிவலிங்கத்தை தெய்வீககாட்சியாக கண்டறிந்தார். மேற்படிஇடத்தில் 06.05.1446 ல் கால்கோல் விழா நடத்தி 10.06.1447 ல் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்தார் அதன்பின்னர் மன்னர் பராக்கிரமபாண்டியன் இராஜகோபுரம் கட்ட 30.11.1457 ல் ஆரம்பிக்கப்பட்டு 1463 வரை கல்காரம் கட்டப்பட்டது.
அதன் பின்பு மன்னரின் தம்பி குலசேகரபாண்டியன் 1474 ல் இராஜகோபுரம் கட்டும் பணியை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்தினார். குலசேகரபாண்டியன் கோயில் முன்புள்ள மண்டபத்தினை கட்டினான் அதற்கு திருவோலக்கா மண்டபம் என்று பெயர். அதேபோல பாலமுருகன் சந்நிதி முன்புள்ள மண்டபத்தினை சீவல்லபமாரபாண்டியனால் கட்டப்பட்டது.
1518 ல் பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் மற்றும் 1526 ம் ஆண்டு சேரமன்னன் உதயமார்த்தாண்ட வர்மா மற்றும் 1588 துங்கராமன்பாண்டியன் அதன்பின்பு 1618 வரகுணராமபாண்டியன் ஆகியோர் குடமுழுக்கு நடத்தினர்.
1792 முதல் 1824 வரை இராஜகோபுரம் தீக்கிரையாக்கப்பட்டது.1940 வரை இராஜகோபுரம் திருப்பணி வேலையை செய்ய எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
21.04.1948 ல் இராஜகோபுரத்தில் எவ்விதபணிகளும் மேற்கொள்ளாமல் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
1962 ம் ஆண்டு திரு.பி.டிராஜன்தலைமையிலான திருப்பணிக்குழுவினர் இராஜகோபுரத்தில் சேதமடைந்த பகுதிகளை அகற்றிவிட்டு , கல்காரம் வரையிலான சிமிண்டுகலவை அழுத்தத்தின் மூலம் கல்காரம் பகுதி சீரமைக்கப்பட்டு இராஜகோபுரம் கட்டாமலும் , பாலமுருகன் சந்நிதி புதிதாக அமைத்து திருப்பணி செய்து 1967 ஆம்ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
அதன்பின்பு தினத்தந்திநாளிதழ் தொழிலதிபர் திரு.சிவந்திஆதித்தனார் மற்றும் திருப்பணிக்குழுவினர் 24.02.1982 ஆம் ஆண்டு கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு முதல்நிலையும் , ஒன்பதாம்நிலையும் மேற்படியாரின் உபயநிதியிலும் ,எட்டாம்நிலை. தென்காசி வாழ்நாடார் சமுதாயத்தாலும் 2 முதல் 7 ஆம் நிலை வரை தமிழ்நாட்டில் உள்ள முதுநிலைத்திருக்கோயில்களின் நிதி உதவியினாலும் 25.06 1990 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது., அதன் பின்பு மேற்படிகுழுவினரால், 17.03.2006 ஆம் ஆண்டு திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடைபெற்றது.