அருள்மிகு முத்துமாலையம்மன் திருக்கோயில், குரங்கணி - 628623, தூத்துக்குடி .
Arulmigu Muthumalaiamman Temple, Kurankani - 628623, Thoothukudi District [TM038203]
×
Temple History
தல வரலாறு
இராவணன் சீதாபிராட்டியை சிறை எடுத்து சென்றபோது தான்செல்லும் பாதை அடையாளம் தெரியவேண்டும் என்பதற்காக சீதாபிராட்டி தன்னுடைய முத்துமாலைகளை கழட்டி எறிந்ததாகவும் அந்த முத்துமாலையே முத்துமாலையம்மன் என்ற அருள் நாயகியாக அனைவரும் பூஜித்து வரும் அன்புத்தெய்வமாக ஆனது என்பதும் வரலாறு. இன்னொறு வரலாறும் உண்டு முன்பு ஓரு காலத்தில் சத்தியமுனி என்ற சிவனடியார் முக்தி பெற்றிட வேண்டி தவம் செய்து வந்தார். ஓருமுறை அவர் யாகம் செய்யும்போது அவரது தவ வலிமையைக் கண்டு உலக மாதாவாம் உமா தேவியே மனமிறங்கி அங்கு எழுந்தருளி முனிவருக்கு முக்தி கொடுத்தாள். அப்பொழுது அன்னையின் வியர்வை முத்துக்கள் அவள் நெற்றியில் இருந்து சிந்தின .அவ்வருட் துளிகள் அழகும் திருவுருவும் கொண்டு தேவ கன்னியராய் அந்த யாகத்திலிருந்து...இராவணன் சீதாபிராட்டியை சிறை எடுத்து சென்றபோது தான்செல்லும் பாதை அடையாளம் தெரியவேண்டும் என்பதற்காக சீதாபிராட்டி தன்னுடைய முத்துமாலைகளை கழட்டி எறிந்ததாகவும் அந்த முத்துமாலையே முத்துமாலையம்மன் என்ற அருள் நாயகியாக அனைவரும் பூஜித்து வரும் அன்புத்தெய்வமாக ஆனது என்பதும் வரலாறு. இன்னொறு வரலாறும் உண்டு முன்பு ஓரு காலத்தில் சத்தியமுனி என்ற சிவனடியார் முக்தி பெற்றிட வேண்டி தவம் செய்து வந்தார். ஓருமுறை அவர் யாகம் செய்யும்போது அவரது தவ வலிமையைக் கண்டு உலக மாதாவாம் உமா தேவியே மனமிறங்கி அங்கு எழுந்தருளி முனிவருக்கு முக்தி கொடுத்தாள். அப்பொழுது அன்னையின் வியர்வை முத்துக்கள் அவள் நெற்றியில் இருந்து சிந்தின .அவ்வருட் துளிகள் அழகும் திருவுருவும் கொண்டு தேவ கன்னியராய் அந்த யாகத்திலிருந்து தோன்றினர். அத் தெய்வ கன்னியர் முப்பத்திரெண்டு அங்க லட்சனங்களோடு விளங்கினார்கள் . அவர்கள் பொதிகைமலை எழிலையும் அகத்தியர் வாழ்ந்த இடத்தையும் தென்னாட்டு அழகையும் தன்பொருநையாம் தாமிரபரணியின் சிறப்பையும் கான விழைந்தார்கள். இறுதியில் அவர்கள் குரங்கணி வந்தார்கள். திரு நதியின் கரையில் தங்களோடு பிறந்த ஓளி சிந்தும் பொன்,முத்து,வைரம் ஆகிய நவரத்தின ஆபரனங்களை களைந்து வசமாய் வைத்தார்கள். பின்னர் நதியிலே நீராடி முடித்து ஆபரனங்களை பார்க்கும் போது கரையிலிருந்த நவரத்தின ஆபரனங்கள் ஓன்று திரண்டு லிங்கமாக , அலகிலா ஜோதியாக அன்னையின் அருள் ஓளி விளக்காய் சுடரொளி முத்தாய் கோடி சூரியனாய் பிரகாசித்தது. அந்த ஜோதியில் அருள் நாயகி முத்துமரலையம்மன் இரண்டற கலந்துவிட்டாள் என்பதும் ஓரு வரலாறு.