ஸ்தல வரலாறு தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3கிமீ தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது குரங்கணி என்னும் சிற்றூர். இங்கு மாவட்டத்திலேயே சிறப்பு வாய்ந்த அருள்மிகு முத்துமாலையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தென்திருப்பேரை ஊரில் இருந்து 2 கி.மீ துரரம் சென்றால் இக்கோயிலை அடையலாம். இந்த அன்னையின் திருத்தல வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்து சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்கு செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம். குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. முத்துமாலை அம்மன் தேவி தரிசனம் பாவ...