தல வரலாறு
உடன்குடி பகுதிக்கு வியாபாரம் செய்வதற்காக ஸ்ரீவைகுண்டம் மணைக்கரை கிராமத்திலிருந்து 17 வைக்கோல் வண்டி வந்து கொண்டுயிருந்திருக்கிறது. அந்த நேரத்தில் உடன்குடி கணக்கர் கனவில் தோன்றி உங்கள் கிராமத்திற்கு வைக்கோல் வண்டி வருகிறது அதில் 7வது வண்டியில் வருகிறேன். என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார். உடனே கிராம கணக்கர் உடன்குடி வியாபாரத்திற்கு வரும் வைக்கோல் வண்டியை மறித்து தேடியதில் விநாயகர் கல்சிலை இருந்தது. அதனை உடனே இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே கண்டு எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அதுகால போக்கில் கண்டுகொண்ட விநாயகர் என பெயர் வரபெற்றுள்ளது.