அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில், Vilathikulam - 628907, தூத்துக்குடி .
Arulmigu Meenakshi Sundareswarar Temple, Vilathikulam - 628907, Thoothukudi District [TM038236]
×
Temple History
தல பெருமை
ஆதிகாலத்தில் திம்மராஜபுரம் என்று அழைக்கப்பட்ட இவ்வூரில் சிவாகம விதிகளில் தேர்ந்த அந்தணர் ஒருவர் இருந்தார் . அவர் வாரந்தோறும் கால்நடையாகவே மதுரைசென்று அன்னை மீனாட்சி அம்மையையும் , சொக்கநாதசுவாமியையும் தரிசித்து திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் . நாளடைவில் ஏற்பட்ட முதுமை காரணமாக கால்நடையாக மதுரைக்குச் செல்ல இயலாததால் மனம் மிகவும் வருந்தி , கண்ணீர் சிந்தி அழுது தொழுதார் . அன்னை மீனாட்சியை எண்ணி உள்ளம் உருக வேண்டினார் . அதன்பிறகு இறையருளை வேண்டி உணவின்றி , தவழ்ந்து தவழ்ந்து மதுரை செல்ல எத்தணித்தார் . அழைத்த குரலுக்கு ஓடி வந்து அருள்பாலிக்கும் அன்னை மீனாட்சி திம்மராஜபுரத்தில் விளா மரமும் , அத்திமரமும் சேர்ந்த குளக்கரை அருகே இறைவனாருக்கும் , தமக்கும் ஓர்...ஆதிகாலத்தில் திம்மராஜபுரம் என்று அழைக்கப்பட்ட இவ்வூரில் சிவாகம விதிகளில் தேர்ந்த அந்தணர் ஒருவர் இருந்தார் . அவர் வாரந்தோறும் கால்நடையாகவே மதுரைசென்று அன்னை மீனாட்சி அம்மையையும் , சொக்கநாதசுவாமியையும் தரிசித்து திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் . நாளடைவில் ஏற்பட்ட முதுமை காரணமாக கால்நடையாக மதுரைக்குச் செல்ல இயலாததால் மனம் மிகவும் வருந்தி , கண்ணீர் சிந்தி அழுது தொழுதார் . அன்னை மீனாட்சியை எண்ணி உள்ளம் உருக வேண்டினார் . அதன்பிறகு இறையருளை வேண்டி உணவின்றி , தவழ்ந்து தவழ்ந்து மதுரை செல்ல எத்தணித்தார் . அழைத்த குரலுக்கு ஓடி வந்து அருள்பாலிக்கும் அன்னை மீனாட்சி திம்மராஜபுரத்தில் விளா மரமும் , அத்திமரமும் சேர்ந்த குளக்கரை அருகே இறைவனாருக்கும் , தமக்கும் ஓர் ஆலயம் அமைக்க வேண்டியும் அந்த இடத்தில் தான் அமர்ந்து அருள்பாலிப்பதாகவும் ஆணையிட்டாள் . அதன்படியே அந்த அந்தணரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாவும் , சுவாமியும் , அம்பாளும் பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்று ஒரு வயோதிக அந்தணர் , அந்தண ஸ்திரி இருவரும் தோன்றி லட்சேப நதியில் மூழ்கி மூலஸ்தானத்தில் நுழைந்து ஒளிப்பிழம்பாகி நின்று மறைந்ததாகவும் செவி வழிச்செய்தி கூறுகிறது . அதன்பின்னர் அந்த அந்தணர் வழிவந்தவர்கள் பராமரிப்பிலும் , இறையருள் சக்தி உணர்ந்த பெரியவர்களின் சக்தியினாலும் , அருட் கொடையினாலும் திருக்கோயில் வளர்ச்சி பெற்றது .