எங்கும் நிறைந்து யாவற்றையும் கடந்த பரம்பொருளாகிய சிவபெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு பற்பல திருமேனிகளில் பற்பல இடங்களில் திருக்கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் . அப்படிப்பட்ட திருக்கோயில்களில் தென்தமிழகத்தில் விளாத்திகுளம் நகரில் குளத்தங்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்த புராணச் சிறப்பு கொண்ட திருக்கோயிலாகும் . மீனைப் போலவே கண்ணிமை கொட்டாமல் உலகனைத்தையும் தன் கடாட்சத்தினாலேயே அருள்பாலித்து காப்பாற்றி வருபவள் மீனாட்சி உலகனைத்துக்கும் அம்மையும் அப்பனுமாக உள்ளவர் மீனாட்சி சுந்தரேசுவரர் இவ்விரு சிறப்புகளையும் ஒருங்கே பெற்றுள்ள விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி அம்பாள் உடனுறை அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர். தூத்துக்குடி...