Screen Reader Access     A-AA+
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம் - 628206, தூத்துக்குடி .
Arulmigu Mutharamman Temple, Kulasekaranpatinam - 628206, Thoothukudi District [TM038272]
×
Temple History

தல வரலாறு

திருத்தலச் சிறப்பு : அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர் மாநகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கடற்கரை நெடுஞ்சாலையில் திருச்செந்தூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டினம் என்னும் பேரூரில் கடற்கரைக்கு அருகில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரருடன் அமர்ந்திருந்து அன்னை முத்தாரம்மன் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் பெருநகராக வளர்ச்சி பெற்றது. எனவே அந்த மாமன்னனின் பெயரால் இவ்வூர் குலசேகரபட்டினம் எனப் பின்னர் அழைக்கப்படலாயிற்று. மூர்த்தியின் சிறப்பு : மூர்த்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்று பொருள். இறைவன் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் நின்று காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறான். இங்கே அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். தற்போது நாம்...