Arulmigu Madhusoothana Perumal Temple, Parakkai - 629601, கன்னியாகுமரி .
Arulmigu Madhusoothana Perumal Temple, Parakkai - 629601, Kanyakumari District [TM038385]
×
Temple History
புராண பின்புலம்
பறக்கை மதுசூதனனர் கோயிலைப் பற்றிய தலபுராணம் எழுதி வைக்கப்படவில்லை. என்றாலும் சுசீந்திரம் தலபுராணத்திலும் கன்னியாகுமரி தலபுராணத்திலும் பறக்கை தளம் பற்றிய செய்திகள் உள்ளன. சுசீந்திரம் கோயிலைப்பற்றிய தலபுராணக்கதை கி.பி.15-ஆம் நூற்றாண்டினது. அதனால் அதே காலத்தில் பறக்கை தலபுராணமும் உருவாகியிருக்கலாம்.
பறக்கைத் தலபுராணக்கதை அகத்தியர் கருடனைத் தொழுத பகுதியில் வருகிறது. அகத்தியர் ஞானகான வனத்தில் (சுசீந்திரம்) தாணுமாலயனை வணங்க வந்தார். அப்போது அசரீரி வில்வம் நிறைந்த வேதவனம் (பறக்கை) ஒன்று அருகே உள்ளது. அங்கேய் மதுசூதனன் ஸ்ரீதேவி பூதேவியுடன் உறைகின்றான். அவனையும் வணங்கு என்றது. அகத்தியர் பறக்கை சென்று மதுசூதனனை வணங்கி தேவகாந்தார ராகத்தில் வாழ்த்தினார். அகத்தியரின் வாழ்த்தொலி இந்திரனுக்குக் கேட்டது. அவனும் பறக்கை வந்து மதுசூதனனை வழிபட்டான்.
அந்தச் சமயத்தில், விஷ்ணு ஒளிவடிவாய் பூதேவி, ஸ்ரீதேவியுடன்...பறக்கை மதுசூதனனர் கோயிலைப் பற்றிய தலபுராணம் எழுதி வைக்கப்படவில்லை. என்றாலும் சுசீந்திரம் தலபுராணத்திலும் கன்னியாகுமரி தலபுராணத்திலும் பறக்கை தளம் பற்றிய செய்திகள் உள்ளன. சுசீந்திரம் கோயிலைப்பற்றிய தலபுராணக்கதை கி.பி.15-ஆம் நூற்றாண்டினது. அதனால் அதே காலத்தில் பறக்கை தலபுராணமும் உருவாகியிருக்கலாம்.
பறக்கைத் தலபுராணக்கதை அகத்தியர் கருடனைத் தொழுத பகுதியில் வருகிறது. அகத்தியர் ஞானகான வனத்தில் (சுசீந்திரம்) தாணுமாலயனை வணங்க வந்தார். அப்போது அசரீரி வில்வம் நிறைந்த வேதவனம் (பறக்கை) ஒன்று அருகே உள்ளது. அங்கேய் மதுசூதனன் ஸ்ரீதேவி பூதேவியுடன் உறைகின்றான். அவனையும் வணங்கு என்றது. அகத்தியர் பறக்கை சென்று மதுசூதனனை வணங்கி தேவகாந்தார ராகத்தில் வாழ்த்தினார். அகத்தியரின் வாழ்த்தொலி இந்திரனுக்குக் கேட்டது. அவனும் பறக்கை வந்து மதுசூதனனை வழிபட்டான்.
அந்தச் சமயத்தில், விஷ்ணு ஒளிவடிவாய் பூதேவி, ஸ்ரீதேவியுடன் இந்திரனுக்குக் காட்சியருளினார். இந்திரன் சுசீந்திரம் தலத்தில் இருப்பவனும் பறக்கை தலத்தில் இருப்பவனும் ஒன்று என்று சொல்லி வணங்கினான்.
இந்த கதையுடன் பறக்கை மதுசூதனனைக் கருடன் தொழுத வரலாறும் சுசீந்திரம் தலபுராணத்தில் வருகிறது. இதன்படி கருடன் தன் விமோசனத்திற்குப் பறக்கை மதுசூதனனைத் தொழுதான் என்பது கதை, பறக்கை கருடன் வழிபட்ட தலம் என்ற வழக்காறும் உண்டு.