Arulmigu Mahadevar Temple, Vadasery, Nagercoil - 629001, கன்னியாகுமரி .
Arulmigu Mahadevar Temple, Vadasery, Nagercoil - 629001, Kanyakumari District [TM038413]
×
Temple History
தல வரலாறு
பரிவார தெய்வங்கள்
கிழக்கு வெளி பிரகார முன்மண்டபத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் சாஸ்தா கோவிலும் உள்ளது. சாஸ்தாவும் இசக்கியும் இங்கு பீடமாக உள்ளனர். அருகே அமர்ந்த கோல வடிவம். பிற்கால பிரதிஷ்டை. சாஸ்தா பீடம் பழையது . மூலவருடன் தொடர்புடையது. இதற்கு தினமும் பூஜை உண்டு. முன்மண்டபத்தை அடுத்து கிழக்கு பிரகாரத்தில் வடக்கு பகுதியில் ஆவுடையம்மன் கோவில் உள்ளது. கருவறை அந்தராளம் என அமைந்தது. கருவறையின் மேல் பிற்கால விமானம் உண்டு .ஆவுடை நின்ற கோலம், கால்படிமம் இரண்டு கைகள், ஒரு கையில் தாமரை மலர், இன்னொரு கை லோலோ ஹஸ்தம்.
தெற்கு உட்பிரகாரத்தில் வடக்கு நோக்கி ஜுவர தேவர் இருக்கிறார். கருவறை மட்டுமே கொண்ட சிறு கோவில். கன்னியாகுமரி...பரிவார தெய்வங்கள்
கிழக்கு வெளி பிரகார முன்மண்டபத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் சாஸ்தா கோவிலும் உள்ளது. சாஸ்தாவும் இசக்கியும் இங்கு பீடமாக உள்ளனர். அருகே அமர்ந்த கோல வடிவம். பிற்கால பிரதிஷ்டை. சாஸ்தா பீடம் பழையது . மூலவருடன் தொடர்புடையது. இதற்கு தினமும் பூஜை உண்டு. முன்மண்டபத்தை அடுத்து கிழக்கு பிரகாரத்தில் வடக்கு பகுதியில் ஆவுடையம்மன் கோவில் உள்ளது. கருவறை அந்தராளம் என அமைந்தது. கருவறையின் மேல் பிற்கால விமானம் உண்டு .ஆவுடை நின்ற கோலம், கால்படிமம் இரண்டு கைகள், ஒரு கையில் தாமரை மலர், இன்னொரு கை லோலோ ஹஸ்தம்.
தெற்கு உட்பிரகாரத்தில் வடக்கு நோக்கி ஜுவர தேவர் இருக்கிறார். கருவறை மட்டுமே கொண்ட சிறு கோவில். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் ஜுவர தேவர் வழிபாடு தெய்வமாக உள்ள கோவில் இது ஒன்றே. இது கல் படிமம். நின்ற கோலம் மூன்று தலைகள், ஒன்பது கண்கள், நான்கு கைகள், மூன்று கால்கள். ஜுவர தேவரறை வழிபடுபவருக்கு கடும் ஜுவரம் வராது. கபம் தொடர்பான வியாதிகள் வராது என்பது நம்பிக்கை.
ஜுவர தேவர் தொடர்பாக சிவபுராணத்தில் ஒரு கதை உண்டு. சிவனும், பெருமாளும் விளையாட்டாக சண்டை இட்டனர். அப்போது சிவன் மீது திருமால் ஒரு ஆயுதத்தை பிரயோகித்தார் .அதனால அதனால் சிவனின் உருவம் மாறுபட்டு. மூன்று தலைகளும், மூன்று கால்களும் ஆயின .அந்த உருவத்துடன் சிவ பெருமான் இருக்க திருமால் விரும்பினார். அப்படியே சிவனும் காட்சி அளித்தார்.
ஜுவர தேவரின் எதிரே தட்ஷிணாமூர்த்தி கோவில் உள்ளது. இது தெற்கு நோக்கியது. கால்படிமம் நின்ற கோலம், இதே பிரகாரம் கன்னிமூலையில் கணபதி கோவிலும், வடக்கு பிரகாரம் வட கிழக்கு மூலையில் சுப்ரமணியர் கோவிலும் உள்ளன. சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இதே பிரகாரததில் சண்டிகேஸ்வரரின் சிறு கோவில் வடக்கு பார்த்து உள்ளது. வடக்கு பிரகாரம் நடுவே தெற்கு நோக்கி சனீஸ்வரர் நின்ற கோலத்தில் இருக்கிறார்.
தல பெருமை
தழுவிய மஹாதேவரை ஜுவர தேவர் என சொல்வது இங்குள்ள மரபு. இக்கோவில் தெற்கு பிரகாரத்தில் ஜுவர தேவர் இருக்கிறார். மூலவர் லிங்க வடிவினர். ஆயினும் ஜுவர தேவராக கொள்கின்றனர். இக்கோவில் இறைவி ஆவுடையம்மன் குறித்து ஒரு கதை உண்டு. இந்த சிவன் கோவிலுக்கு இளம் பெண் ஒருத்தி தினமும் பால் கொண்டு வருவாள். ஒருநாள் அவள் கருவறை அருகே பால் வைத்தபோது அவளை சிவன் ஆட்கொண்டார். அங்கே அவள் அம்மனாக வழிபாடு பெற்று வருகிறார்.தழுவிய மஹாதேவரை ஜுவர தேவர் என சொல்வது இங்குள்ள மரபு. இக்கோவில் தெற்கு பிரகாரத்தில் ஜுவர தேவர் இருக்கிறார். மூலவர் லிங்க வடிவினர். ஆயினும் ஜுவர தேவராக கொள்கின்றனர். இக்கோவில் இறைவி ஆவுடையம்மன் குறித்து ஒரு கதை உண்டு. இந்த சிவன் கோவிலுக்கு இளம் பெண் ஒருத்தி தினமும் பால் கொண்டு வருவாள். ஒருநாள் அவள் கருவறை அருகே பால் வைத்தபோது அவளை சிவன் ஆட்கொண்டார். அங்கே அவள் அம்மனாக வழிபாடு பெற்று வருகிறார்.