தல பெருமை
இக்கோயிலின் மேற்கே தோட்டத்தில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்கம் உயரம் 160 செ.மீ இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர் என்பது ஐதிகம். வேணாட்டரசகர்கள் இங்கே இருந்த போது தறிகெட்டு ஒடிய குதிரை ஒந்று இந்த கோயில் இருக்கும் இடத்திற்கு வந்து அடைபட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தைக் கண்டான். அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டினான் என்பது ஒரு கதை.