இக்கோயில் கிழக்கு நோக்கியது. கோயிலின் எதிரே தெப்பமண்டத்துடன் கூடிய தெப்பக்குளம். சிவன் சன்னதி எதிரே மூன்றடுக்கு கோபுரம். பெரும்பாலும் பக்தர்கள் கோயில் வடக்கு வாசல் வழியே வருகின்றனர். கிழக்கு வாசல் அதிக பயன்பாடில்லாததால் பழைமை கவிழ்ந்துள்ளது. இக்கோயில்சதுர வடிவினது. 4 மீட்டர்உயரமுடைய கோட்டை மதில்சுவர் உண்டு. இந்த வளாகத்தில் சிவனுக்கும் அம்மனுக்கும் தனிக்கோயில்கள் உள்ளள. இரு கோயில்களையும் இணைக்கும் மண்டபம் உண்டு. பன்னிரு சிவாலயங்களில் அம்மனுக்குத் தனிக்கோயில் இருப்பது இங்கு மட்டும்தான். கோயிலின் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம், முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்னும் அமைப்புடையது. கிழக்கு பிரகாரம் சித்திரசபை என்றும் அழைக்கப்படுகிறது. பிரமாண்டமான தோற்றமுடையது. 25 தூண்கள் கொண்ட இந்த மண்டபத்தில் தென்புறம் சிவன் கோயில் வாசலும், வடபுறம் அம்மன் கோயில் வாசலும்...