Arulmigu Azhageswari Jayantheeswarar Temple, Thazhakkudi - 629901, கன்னியாகுமரி .
Arulmigu Azhageswari Jayantheeswarar Temple, Thazhakkudi - 629901, Kanyakumari District [TM038699]
×
Temple History
தல வரலாறு
கருவறை மூலவர்
கருவறை சிவன் ஆவுடையின் கீழ் 32அடி ஆழத்தில் இருப்பது என்கின்றனர்.இந்த லிங்க வடிவம் 12 ஆவுடைகளின் மேல் உள்ளது என்பதை 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நடந்த குடமுழுக்கு விழாவில் கண்டறிந்தனர் என்கின்றனர்.இந்த சிவலிங்கம் கங்கையில் நீராட்டி வந்தது எனத் தலபுராணம் கூறுகிறது.
பரிவார தெய்வங்கள்
கருவறையின் வலப்புறம் தேவிக்கு தனிக்கோவில் அழகம்மன் எனப்படுகிறாள்.சுவாமியின் இடது புறம் தேவியை அமைப்பது வழக்கம். ஆனால் பாண்டி நாட்டின் மரபின்படி அம்மன் வலதுபுறம் இருக்கிறாள்.அம்மன் நின்ற கோலம். வலது கையில் நீலோத்பவ மலர். இடது கை லோலோகஸ்தம். துவிபாங்க வடிவம்.
கருவறையின் வெளியே தென்திசையில் தக்ஷிண மூர்த்தி நான்கு கைகளுடன் இருக்கிறார். வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர்,சண்டிகேஸ்வரர், பிரகாரத்தின்...கருவறை மூலவர்
கருவறை சிவன் ஆவுடையின் கீழ் 32அடி ஆழத்தில் இருப்பது என்கின்றனர்.இந்த லிங்க வடிவம் 12 ஆவுடைகளின் மேல் உள்ளது என்பதை 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நடந்த குடமுழுக்கு விழாவில் கண்டறிந்தனர் என்கின்றனர்.இந்த சிவலிங்கம் கங்கையில் நீராட்டி வந்தது எனத் தலபுராணம் கூறுகிறது.
பரிவார தெய்வங்கள்
கருவறையின் வலப்புறம் தேவிக்கு தனிக்கோவில் அழகம்மன் எனப்படுகிறாள்.சுவாமியின் இடது புறம் தேவியை அமைப்பது வழக்கம். ஆனால் பாண்டி நாட்டின் மரபின்படி அம்மன் வலதுபுறம் இருக்கிறாள்.அம்மன் நின்ற கோலம். வலது கையில் நீலோத்பவ மலர். இடது கை லோலோகஸ்தம். துவிபாங்க வடிவம்.
கருவறையின் வெளியே தென்திசையில் தக்ஷிண மூர்த்தி நான்கு கைகளுடன் இருக்கிறார். வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர்,சண்டிகேஸ்வரர், பிரகாரத்தின் வடக்கே காகவாகனத்தில் சனீஸ்வரர், யாகசாலையை அடுத்து நடராஜர்,காலபைரவர்,சந்திரன் ஆகியோர் உள்ளனர்.இவை கால்படிமங்கள். விழா காலங்களில் வாகனங்களில் கொண்டு செல்வதற்கும்,அர்ச்சனைக்கு உரியதாக 17 செப்புப்படிமங்கள் உள்ளன.
தல பெருமை
தாழக்குடி தலபுராணம் வாய்மொழி வடிவிலும் கையெழுத்து வடிவிலும் உள்ளது. இதை எழுதியவர் குளத்தூர் பரஞ்சோதி என்பவர்.இவர் தன் ஆசிரியர் இராமலிங்க தேசிகர் என்பவரின் அறிவுறுத்தலில் சமஸ்க்ரித் மொழியிலிருந்து கதையை தமிழ்படுத்தினார். ஏட்டுவடிவில் உள்ள இந்த தலபுராணத்தில் விருத்துப்பாடல்கள் உள்ளன.இது தாழக்குடி கோவிலில் அரங்கேறியிருக்கிறது.
இந்த புராண ஆசிரியிரான தர்மலிங்க தேசிகர் பாண்டி நாட்டிலிருந்து இங்கே குடியேறியவர். இத்தலபுராணத்தில் தாழக்குடி ஊர் சயந்தீஸ்வரர் கோயில் சிவன் இந்திரன் கதையுடன் சேர்த்துக் கூறப்படுகிறது.
இத்தலபுராண கதை வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்தில் வரும் சயந்தன் கதையிலிருந்து தொடங்குகிறது.ராமன் வன வாசத்தின் போது ஒரு முறை காட்டில் அமர்ந்து இருந்தான். சீதை அவன் மடியில் படுத்திருந்தான்....தாழக்குடி தலபுராணம் வாய்மொழி வடிவிலும் கையெழுத்து வடிவிலும் உள்ளது. இதை எழுதியவர் குளத்தூர் பரஞ்சோதி என்பவர்.இவர் தன் ஆசிரியர் இராமலிங்க தேசிகர் என்பவரின் அறிவுறுத்தலில் சமஸ்க்ரித் மொழியிலிருந்து கதையை தமிழ்படுத்தினார். ஏட்டுவடிவில் உள்ள இந்த தலபுராணத்தில் விருத்துப்பாடல்கள் உள்ளன.இது தாழக்குடி கோவிலில் அரங்கேறியிருக்கிறது.
இந்த புராண ஆசிரியிரான தர்மலிங்க தேசிகர் பாண்டி நாட்டிலிருந்து இங்கே குடியேறியவர். இத்தலபுராணத்தில் தாழக்குடி ஊர் சயந்தீஸ்வரர் கோயில் சிவன் இந்திரன் கதையுடன் சேர்த்துக் கூறப்படுகிறது.
இத்தலபுராண கதை வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்தில் வரும் சயந்தன் கதையிலிருந்து தொடங்குகிறது.ராமன் வன வாசத்தின் போது ஒரு முறை காட்டில் அமர்ந்து இருந்தான். சீதை அவன் மடியில் படுத்திருந்தான். இருவரும் அயர்ந்து உறங்கி விட்டனர். அப்போது இந்திரன் மகன் ஜெயந்தன் காகமாக வந்து சீதையின் உடலை கொத்தினான்.இரத்தம் சிந்தியது. கண்விழித்த ராமன் சினமுற்று புல்லை பறித்து மந்திரம் ஓதி அவன் மேல் ஏவினான். அது அவனை துரத்தியது . அந்த மந்திரம் சயந்தன் கண்ணை பறித்தது.
.இந்த சயந்தன் தன் பாவம் போக தாழக்குடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். பின் சாபவிமோச்சனம் பெற்றான். அவன் வழிப்பட்ட சிவன் சயந்தீஸ்வரன் எனப்பட்டான்
தாழக்குடி ஜயந்தீஸ்வரர் கோவில் கட்டப்பட்டதன் கதையையும் தலபுராண ஆசிரியர் கூறுகிறார். இதை பலவாறாகவும் கொள்ளலாம்.திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வீரகேரளன் என்ற அரசன் இருந்தான்.அவன் வேணாட்டு மரபை தேர்ந்தவன்.அவன் பல நாட்கள் குழந்தையின்றி வருந்தியபோது அகத்தியர் கனவில் தோன்றி தாழக்குடி ஊரில் குடி கொண்டிருக்கும் ஜெயந்தீஸ்வரனுக்கு கோவில் எடுக்க சொன்னார்.அவனும் அப்படியே செய்து குறை நீங்கினான்.இங்கு ஒரு குளமும் வெட்டினான்.இது வீரகேரளப்பேரேரி என்று அழைக்கப்படுகிறது.