Screen Reader Access     A-AA+
Arulmigu Aadhikesava Perumal Temple, Thiruvattar, திருவட்டாா் - 629177, கன்னியாகுமரி .
Arulmigu Aadhikesava Perumal Temple, Thiruvattar, Thiruvattar - 629177, Kanyakumari District [TM038752]
×
Temple History

தல வரலாறு

ஆதிகேச பெருமாள் கோவிலின் தலபுராணம் மலையாளம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் உள்ளது. இவை அச்சில் வந்துள்ளன. மலையாள மொழியில் உள்ள ஹரிஹர ஐயர் எழுதிய திருவட்டாறு ஸ்தல மகாத்மியம், கேசவரு சங்கரநாராயணன் கேசி மதனம் துள்ளல், கேசி மதன ஆட்ட கதை ஆகிய மூன்றும் சமஸ்கிருத மொழி தல புராண பாதிப்பால் எழுந்தவை இத்தலப்புராண கதைகள் 17 அல்லது 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். ...

இலக்கிய பின்புலம்

கருவறை இறைவன் கருவறையில் ஆதிகேசவன் பாம்பின் மேல் பள்ளி கொண்ட வடிவில் இருக்கிறான். 16008 சாலகிராமங்களால் உருவாக்கப்பட்ட படிமத்தின் மேல் கடும் சர்க்கரை சாத்து பூசப்பட்டு உருவாக்கப்பட்டது இந்த சயன படிமம். இவர் ஐந்து தலைகேசனின் மூன்று மடிப்பு அரவணையில் சயன நிலையில் தென் வடலாக காட்சி தருகிறார். முகம் சற்று மேல்நோக்கி பார்த்தது போல் அமைந்தது. கேசவனுக்கு இரண்டு கைகள். வலது கை மடிந்து முகத்தை நோக்கி சிம்மகர்ண முத்திரை காட்டுகிறது. இடதுபுஜம் இடையாக நீட்டி கைதளத்தையும் விரல்களையும் தளிர் இலை போல் தொங்கவிட்டு பிரகாசிதமாய் அமைந்தது. கருவறை கிழக்கு சுவரில் வரிசையாக மது,கை...

புராண பின்புலம்

தலைச்சிறப்பு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு என்ற நூல் திருவட்டார் ஊரை குறிப்பிடுகிறது. இந்த ஊரில் எழினி ஆதன் என்ற அரசன் இருந்தான். இறையனார் அகப் பொருள் உரை, பாண்டி கோவை, கலிங்கத்துபரணி போன்ற நூல்களும் இவ்வூரை குறிப்பிடுகின்றன. ...