Screen Reader Access     A-AA+
அருள்மிகு கந்தசாமி (எ) முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பூங்கா நகர், சென்னை - 600003, சென்னை .
Arulmigu Sree Muthu Kumara Swamy Devasthanam, Park Town, Chennai - 600003, Chennai District [TM000388]
×
Temple History

தல பெருமை

தமிழகத்தின் தலைநகரான சென்னையம்பதியிலுள்ள திக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீ கந்தஸ்வாமி கோயிலென வழங்கபெறும் கந்தகோட்டமாகும்.சென்னைக்கு சுமார் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்போரூர் திருத்தலம். அத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்த முருகப் பெருமானே சென்னைக் கந்தகோட்டத்தில் இப்பொழுது காட்சி தந்தருளும் கந்தப்பெருமானாகும். சுமார் ஆண்டுகளுக்கு முன்னர் பாளையக்காரர் மீது பகை கொண்டு மராட்டியர்கள் அவர்களை எதிர்த்து போர் புரிந்தனர். பாளையக்காரர்களும் மராட்டியருக்கும் நடந்த கலகத்தின் போது இதுதான் சமயம் என்று கலகக்காரர்கள் நாட்டிலுள்ள கோயில் முதலிய இடங்களில் கொள்ளை அடிக்க முற்பட்டனர். கொள்ளைக்காரர்கள் நாட்டை சூறையாடுவதை கண்டு மக்கள் துன்புற்றனர். மக்கள் பஞ்சத்தாலும் பிணியாலும் பசியாலும் வாடி வதங்கினர்.திருப்போரூர் திருக்கோயிலின் ஆட்சியாளரான பொன்னம்பல தம்பிரான் இவற்றை கண்டு அச்சமுற்று இருதரப்பட்ட அரசினரால்...