ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில், காந்திநகர், சென்னை - 600020, சென்னை .
Arulmigu Anantha Padmanabha Swamy Temple, Gandhi Nagar, Chennai - 600020, Chennai District [TM000412]
×
Temple History
புராண பின்புலம்
ஓம் நமோ நாராயணய பத்மநாப தயாநிதே, ஸ்ரீ அனந்த பாதபங்கஜம் நமாமி
ஸ்ரீ நித்ய ஸ்ரீ பூதேவி நித்ரயோக ஸ்ரீ ஸத்ய ஜோதிர்லிங்கபூஜிதாம் த்வைத்ரூப
தர்மஸம்ரக்ஷணம் செய்துவரும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரத்தில், அடையார் என்ற திவ்ய ஸ்தலத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆதிசேஷன்மேல் ஸ்ரீ அனந்த பத்மநாபனாய் போக நித்திரையில் பள்ளி கொண்டு அருள்புரிகிறார். ஸ்ரீஅனந்த பத்மநாபர் பள்ளி கொண்டிருக்க.. நாபியிலிருந்து தாமரையில் பிரம்மாவும், வலக்கை அருகில் சிவபெருமானும் அருள்புரிகிறார்கள். முன்னே ஸ்ரீதேவி. பூமிதேவி அமர்ந்து அருள்பாலிக்க மார்க்கண்டேயர், பிருகு மகரிஷிகள் அமர்ந்திருக்க, தும்புரு நாரதர்களும், முப்பத்துமுக்கோடி தேவர்களும், தரிசிக்க ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமி இத்திருக்கோயில், பூலோக வைகுண்டமாய் காக்ஷி தருகிறது.
இத்திருக்கோயிலில் ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீசிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்,...ஓம் நமோ நாராயணய பத்மநாப தயாநிதே, ஸ்ரீ அனந்த பாதபங்கஜம் நமாமி
ஸ்ரீ நித்ய ஸ்ரீ பூதேவி நித்ரயோக ஸ்ரீ ஸத்ய ஜோதிர்லிங்கபூஜிதாம் த்வைத்ரூப
தர்மஸம்ரக்ஷணம் செய்துவரும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரத்தில், அடையார் என்ற திவ்ய ஸ்தலத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆதிசேஷன்மேல் ஸ்ரீ அனந்த பத்மநாபனாய் போக நித்திரையில் பள்ளி கொண்டு அருள்புரிகிறார். ஸ்ரீஅனந்த பத்மநாபர் பள்ளி கொண்டிருக்க.. நாபியிலிருந்து தாமரையில் பிரம்மாவும், வலக்கை அருகில் சிவபெருமானும் அருள்புரிகிறார்கள். முன்னே ஸ்ரீதேவி. பூமிதேவி அமர்ந்து அருள்பாலிக்க மார்க்கண்டேயர், பிருகு மகரிஷிகள் அமர்ந்திருக்க, தும்புரு நாரதர்களும், முப்பத்துமுக்கோடி தேவர்களும், தரிசிக்க ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமி இத்திருக்கோயில், பூலோக வைகுண்டமாய் காக்ஷி தருகிறது.
இத்திருக்கோயிலில் ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீசிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும், 1962-ல் இத்திருக்கோயில் முதல் பிரதிஷ்டையாகி, படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு மஹாக்ஷேத்ரமாகியிருக்கிறது.
ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி சயனித்திருக்கும் அனந்தன் என்ற ஆதிசேஷனின் ஐந்து தலைகள் ஐம்புலன்களைக் குறிக்கின்றன. பாம்பின் உடல் மூன்று பங்காக மடிந்திருப்பது தாமசிகம் (கெட்ட குணங்களை) ராஜாமம் (அகங்கார குணம்) சாத்விகம் (சாத்வீகமான குணம்) என்பதைக் குறிக்கிறது. மனிதன் தன் ஐம்புலன்களை அடக்கியாண்டு வேதத்தை தமது கடமையாக எண்ணி வாழ வேண்டும். இத்திருக்கோயிலில் ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும். எல்லவற்றுக்கும் மேலாக புருஷோத்தமனாக இருப்பவரே ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி மூலவர் கர்ப்பக் கிருஹத்தின் நுழைவாயில்கள் மூன்றாக உள்ளன. இம்மூன்று வாயில்கள் மூலம் மூலவர் திருவுருவை காணமுடியும், ஸிரஸூ பாகத்தைக் காட்டும் நுழைவாயில் பேரறிவையும்,
நடுவாயில் கர்ப்ப கிருஹத்தின் இதயத்தையும், அதிலிருந்து வெளிப்படும் அன்பையும், சிருஷ்டியையும்,
பாதங்களை காட்டும் நுழைவாயில் முக்தியின் எல்லையையும் காட்டுகின்றன. கடந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் ஆகிய காலச் சக்கரத்தை இம்மூன்று நுழைவாயில்களும் குறிப்பிடுகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது.
பக்தர்களின் பரிபூர்ண ஒத்துழைப்பினாலும், தர்மபரிபாலன சபா என்ற பரம்பரை அறங்காவலர்களின் அமைப்பின் மூலம், பக்தர்களின் நிதி உதவியினால் இந்த புனிதமான கோயில் 12-03-1962 அன்று ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாகும். சிருங்கேரி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹா ஸ்வாமிகள் முதல் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்கள். ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ காஞ்சி காமகோடி பரமாசார்யாள் பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் அவர்களால் வழங்கப்பட்ட புனித யந்திரத்தை சிருங்கேரி ஜகத்குரு அவர்கள். ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்லாமியின் பாதகமலங்களில் அன்றைய தினமே பிரதிஷ்டை செய்தார்கள். இது சிறப்பு வாய்ந்ததும் மற்றும் ஒரு தெய்வீக சங்கமமுமாகும் அன்றிலிருந்து பத்தர்கள் பகவானின் அருளாசிகளை பெற்று வருகிறார்கள். த்வஜஸ்தம்பம் நிறுவப்பட்டதால் இத்திருக்கோயில் தெய்வீகமாகக் காட்சியளிக்கிறது. இந்த திருக்கோயிலில் ஸ்ரீ இஷ்டசித்தி விநாயகர், ஸ்ரீகருடர், ஸ்ரீ சுதர்ஸனர். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ அஷ்டாதசபுஜ துர்கை, ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நவகிரஹ சன்னதிகள் உள்ளன.