அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், பவானி - 638301, ஈரோடு .
Arulmigu Ellaiamman Temple, Bhavani - 638301, Erode District [TM042630]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம்,, முன்மண்டபம், சப்தமாதர் சன்னதி, சிம்மம், பலிபீடம், இராஜகோபுரம், விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது, கிழக்குதிசை நோக்கிய கருவறையின் நடுவே எல்லையம்மன் அமர்ந்தகோலத்தில் காடசியளிக்கின்றார், அம்மனின் தலையை ஜூவாலை மகுடமும் கழுத்தில் அணிகலன்களும் கரங்களில் ஆயுதங்களும் அழகு செய்கின்றன. கருவறையின் புறச்சுவர் அதிட்டானம் முதல் சிகரம் வரை செங்கல் மற்றும் சுதைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது, சுவர்ப்பகுதியை அரைத்தூண்களும் தேவகோட்ட மாடங்களும் அழகு செய்கின்றன. சுவர்ப்பகுதியில் உள்ள தேவகோட்ட மாடங்களில் சாமுண்டி, இந்திராணி, வைஷ்ணவி, பிராம்மி, சிவ...அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம்,, முன்மண்டபம், சப்தமாதர் சன்னதி, சிம்மம், பலிபீடம், இராஜகோபுரம், விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது, கிழக்குதிசை நோக்கிய கருவறையின் நடுவே எல்லையம்மன் அமர்ந்தகோலத்தில் காடசியளிக்கின்றார், அம்மனின் தலையை ஜூவாலை மகுடமும் கழுத்தில் அணிகலன்களும் கரங்களில் ஆயுதங்களும் அழகு செய்கின்றன. கருவறையின் புறச்சுவர் அதிட்டானம் முதல் சிகரம் வரை செங்கல் மற்றும் சுதைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது, சுவர்ப்பகுதியை அரைத்தூண்களும் தேவகோட்ட மாடங்களும் அழகு செய்கின்றன. சுவர்ப்பகுதியில் உள்ள தேவகோட்ட மாடங்களில் சாமுண்டி, இந்திராணி, வைஷ்ணவி, பிராம்மி, சிவ துர்க்கை ஆகியோர் சிற்பங்கள் காணப்படுகின்றன, பிரஸ்தரத்தின் மேலுள்ள விமானம் இரு தளங்களை கொண்டுள்ளது, இத்தளங்களில் அம்மன், பூதகணங்கள், சிறுவிமானம், சாலைகோபுரம் ஆகியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளது,. இக்கோயில் விமானம் வண்டிக் கூரையையொத்த சாலை விமானமாகும், விமானத்தின் உச்சியில் மூன்று கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கருவறையின் முன் எளிமையான அர்த்த மண்டபம் காணப்படுகிறது, அர்த்த மண்டப வாயிலில் துவாரபாலகியர் சிற்பங்கள் உள்ளன, முன்மண்டபத்தில் சிம்மம், பலிப்பீடம் ஆகியவை காணப்படுகின்றன. முன்மண்டப தென்பகுதியில் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி வராகி, இந்திராணி , சாமுண்டி ஆகிய சப்தமாதர் சிற்பங்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. கிழக்குப்பகுதியில் மூன்று நிலை இராஜகோபுரம் உள்ளது, இக்கோபுரத்தின் வெளிப்பகுதியில் தென்பகுதியில் விநாயகர் சன்னதியும், வடக்குப்பகுதியில் முருகன் சன்னதி காணப்படுகிறது,