அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம்,, முன்மண்டபம், சப்தமாதர் சன்னதி, சிம்மம், பலிபீடம், இராஜகோபுரம், விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது, கிழக்குதிசை நோக்கிய கருவறையின் நடுவே எல்லையம்மன் அமர்ந்தகோலத்தில் காடசியளிக்கின்றார், அம்மனின் தலையை ஜூவாலை மகுடமும் கழுத்தில் அணிகலன்களும் கரங்களில் ஆயுதங்களும் அழகு செய்கின்றன. கருவறையின் புறச்சுவர் அதிட்டானம் முதல் சிகரம் வரை செங்கல் மற்றும் சுதைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது, சுவர்ப்பகுதியை அரைத்தூண்களும் தேவகோட்ட மாடங்களும் அழகு செய்கின்றன. சுவர்ப்பகுதியில் உள்ள தேவகோட்ட மாடங்களில் சாமுண்டி, இந்திராணி, வைஷ்ணவி, பிராம்மி, சிவ...