அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராயப்பேட்டை, சென்னை - 600014, சென்னை .
Arulmigu Sidhi Budhi Vinayakar and Sundareswarar Temple, Royapetta, Chennai - 600014, Chennai District [TM000046]
×
Temple History
இலக்கிய பின்புலம்
தருமமிகு சென்னை மாநகரின் நடுநாயகமாக விளங்கக்கூடிய இராயப்பேட்டை, நகரில் பக்தர்களின் உழ்வினை அகல இக்கநைகத்தில் அச்சாரூபியாக அருள்மிகு சொர்ணாம்பிகை உடனாய சுந்தரேஸ்வராக சிவபெருமான் இருங்கு எழுந்தருளியுள்ளார். மேலும், பால் சுவையுடன் தேன் சுவை போல கல்யாண குணசீலராய் அருள்மிகு சித்தி புத்தி ஸமேதராய் விநாயகப்பெருமானும் திருக்காட்சி புரிகிறார். இம்மூர்த்தியோ இத்தலத்தின் ஆதிமூர்த்தியாவார். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர் கிராமத்தில் ஒர்சிறிய உட்கிராமமாய் நான்கு வீதிகளை மட்டும் கொண்ட சிறிய அளவிலான கிராமமாகவே இந்த இராயப்பேட்டை கிராமம் இருந்தது. கிராமத்தின் நான்கு புறங்களும் தென்னை தோப்புகள், வயல் வெளிகள், சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகாமையில் உள்ள குத்தம்பாக்கம் என்ற கிராமத்தில் இருந்தவர்கள் பெருமளவில் இவ்விடத்திற்கு குடிபெயர்ந்து வாணிபம் செய்வதற்காக வந்திருந்தனர். ஆதிசைவ மரபை சார்ந்த...தருமமிகு சென்னை மாநகரின் நடுநாயகமாக விளங்கக்கூடிய இராயப்பேட்டை, நகரில் பக்தர்களின் உழ்வினை அகல இக்கநைகத்தில் அச்சாரூபியாக அருள்மிகு சொர்ணாம்பிகை உடனாய சுந்தரேஸ்வராக சிவபெருமான் இருங்கு எழுந்தருளியுள்ளார். மேலும், பால் சுவையுடன் தேன் சுவை போல கல்யாண குணசீலராய் அருள்மிகு சித்தி புத்தி ஸமேதராய் விநாயகப்பெருமானும் திருக்காட்சி புரிகிறார். இம்மூர்த்தியோ இத்தலத்தின் ஆதிமூர்த்தியாவார். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர் கிராமத்தில் ஒர்சிறிய உட்கிராமமாய் நான்கு வீதிகளை மட்டும் கொண்ட சிறிய அளவிலான கிராமமாகவே இந்த இராயப்பேட்டை கிராமம் இருந்தது. கிராமத்தின் நான்கு புறங்களும் தென்னை தோப்புகள், வயல் வெளிகள், சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகாமையில் உள்ள குத்தம்பாக்கம் என்ற கிராமத்தில் இருந்தவர்கள் பெருமளவில் இவ்விடத்திற்கு குடிபெயர்ந்து வாணிபம் செய்வதற்காக வந்திருந்தனர். ஆதிசைவ மரபை சார்ந்த அம்மக்கள் மயிலை கிராமத்திலும், திருவல்லிக்கேணி கிராமங்களின் தானியம் போன்றவைகளை வாணிபம் செய்து வந்தனர். வாணிபத்தில் பொருள் ஈட்டிய அவர்கள் அன்றைய கால கட்டத்திலேயே பெரிய கட்டிடங்களை கட்டி குடியிருந்து வந்தனர். அவ்வகையில் கூடியிருந்த செல்வந்தர்களின் ஒருவரின் வீட்டு முகப்பில் ஒரு சிறிய திருக்கோயிலக விநாயகர் சந்நதி மட்டும் இருந்துள்ளது. கிராமத்தின் நடு மத்திய பகுதியில் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் இக்கிராமத்தின் பிரதான தெய்வமாக வணங்கப்பட்டு வந்திருந்தது. இந்நிலையில் இத்திருக்கோயிலை கட்டிய செல்வந்தர் தனது சொந்த ஊரான குத்தம்பாக்கத்திற்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போதேல்லாம் மாட்டு வண்டியில் செல்வது வழக்கத்தில் இருந்தது. பயணகாலம் பகல், இரவு என செல்ல வேண்டியது இருக்கும், அதுபோன்று செல்லும் போது இரவு வேளையில் வனப்பகுதி வழியாக செல்ல வேண்டி இருந்தது. அவ்வகையில் இருள் சூழ்ந்த பகுதியில் செல்வது கடினம் மாட்டு வண்டி சென்றுக்கொண்டிருக்கும்போதே ஒரு பள்ளத்தில் சக்கரம் மாட்டிக்கொண்டது. வண்டி ஓட்டுபவர் இறங்கி சக்கரத்தை தூக்க முயன்ற போது தூக்க இயலவில்லை. பெரு முயற்சித்தும் இயலவில்லை. இச்சமயம் அசரீரி குறலை ஒன்று கேட்க அதில் தாம் அம்பிகையுடன் இங்கு நெடுங்காலம் புதையுண்டு இருப்பதாகவும், தமக்கு உம் இல்லில் கோயில் கட்டும் என்றும் கேட்டுள்ளது. உடனடியாக அச்செல்வந்தர் குத்தம்பாக்கம் சென்று கூலியாட்களை வரச்செய்து பள்ளம் தோன்றிட சூரிய உதயம் ஆகும் வேளையில் அம்பிகையின் சிலையும், சிவலிங்கம் மண்ணிலிருந்து கிடைத்தது. சூரிய ஒளியில் பொன்னிறமாய் காட்சி தந்த அம்பிகையின் சிலை அழகுற இருந்த சிவலிங்கம் இருந்தமையால் அம்பிகைக்கு சொர்ணாம்பிகை என்றும், சுந்தரேஸ்வரர் என திருநாமம் சுட்டி இராயப்பேட்டை கிராமத்தில் தான் வசித்து வந்த பங்களாவை திருக்கோயிலாக மாற்றம் செய்து அருள்மிகு சொர்ணாம்பிகை உடனாய சுந்தரேஸ்வரரை பிரதிஷ்டை செய்ய குடமுழுக்கு செய்ததாகவும் அதே காலகட்டத்திலேயே விநாயகர் சன்னதி பெரிய அளவில் கட்டப்பட்டு அருள்மிகு சித்தி புத்தி அம்பிகைகள் விநாயகருடன் பிரதிஷ்டை செய்ததாகவும், அதில் விநாயகர் கோயிலாக இருந்த பகுதிக்கு ஒட்டிய வாறே நூதனமாக சிவாலயம் கட்டப்பட்டதால் இரு கோயில்களும் ஒருங்கிணைந்த திருக்கோயிலாகவே இன்று வரை உள்ளது.