அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் மற்றும் அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலசுவாமி திருக்கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு - பேளூர், பேளூர் - 636104, சேலம் .
Arulmigu Thanthondriswarar And Astapuja Bala Mathana Venugopalaswamy Temple, Belur - 636104, Salem District [TM004883]
×
Temple History
தல வரலாறு
மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றுமே சிறப்பு.
மூர்த்தி
ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
வசிஷ்ட முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் காட்சி அருளியவர்.
ஸ்தலம்
பஞ்ச பூத ஸ்தலங்களில் முதல் ஸ்தலம் பிரித்வி மண் ஸ்தலம் ஆக விளங்குகிறது.
இந்த ஸ்தலத்திற்கு திருவேள்வியூர் என்ற பெயர் உண்டு. பராந்தக சோழன் இத்திருக்கோவிலை கட்டியுள்ளார்.
தீர்த்தம்
வசிஷ்ட நதி வடவெள்ளாறு ஸ்வேதா நதி என்றும் அழைக்கப்படுகிறது.
திருநீற்றின் சிறப்பு
வசிஷ்ட முனிவர் யாகம் செய்த சாம்பலே திருக்கோயிலின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பிகையின் சிறப்பு
அம்பாளுக்கு அறாம் வளர்த்த நாயகி என்ற பெயர் உண்டு. அம்பாள் ஜடாமுடியோடு நின்ற கோலத்தில்...மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றுமே சிறப்பு.
மூர்த்தி
ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
வசிஷ்ட முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் காட்சி அருளியவர்.
ஸ்தலம்
பஞ்ச பூத ஸ்தலங்களில் முதல் ஸ்தலம் பிரித்வி மண் ஸ்தலம் ஆக விளங்குகிறது.
இந்த ஸ்தலத்திற்கு திருவேள்வியூர் என்ற பெயர் உண்டு. பராந்தக சோழன் இத்திருக்கோவிலை கட்டியுள்ளார்.
தீர்த்தம்
வசிஷ்ட நதி வடவெள்ளாறு ஸ்வேதா நதி என்றும் அழைக்கப்படுகிறது.
திருநீற்றின் சிறப்பு
வசிஷ்ட முனிவர் யாகம் செய்த சாம்பலே திருக்கோயிலின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பிகையின் சிறப்பு
அம்பாளுக்கு அறாம் வளர்த்த நாயகி என்ற பெயர் உண்டு. அம்பாள் ஜடாமுடியோடு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
கல்யாண விநாயகர்
வலம்புரி, இடம்புரி கல்யாண விநாயகராக அருள் பாலிக்கிறார்
வள்ளி தேவசேனா சமேத சிவசண்முக சுப்ரமணிய சுவாமி முருகர்
ஆறு தலையோடு, பன்னிரு கரங்களோடு, இடதுபக்கம் திரும்பியுள்ள மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்
கணம்புல்ல நாயனார் சிறப்பு
கணம்புல்ல நாயனார் இத்தலத்தில் அவதரித்த ஸ்தலமாகும். சிவபெருமானுக்கு தீபம் ஏற்றும் கைங்கரியத்தை செய்தார்.
ஸ்தலம் விருட்சம்
மா, பலா, இலுப்பை
விசேஷ நாட்கள்
சித்திரை மாதம் 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை சூரிய ஒளி சுவாமி மற்றும் அம்பாள் மீது படும் சிறப்புடையது
தல பெருமை
இவ்வூருக்கு அருகாமையில் வசித்து வந்த மாணிக்கம் செட்டி என்பவர் மிளகு வியாபாரம் செய்து வந்தார். மிளகுபொதிகளை எருதுகளின் மீது ஏற்றிக்கொண்டு வெளியூர் சென்று விற்று வருவது அவரது வழக்கம்.
அவ்வாறு ஒரு முறை மிளகுப் பொதிகளுடன் வரும்போது, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் மரங்களடர்ந்த காடாக இருந்ததாம். இரவுப்பொழுதாகி விட்டதால் இந்த இடத்தில் தங்கிச்செல்லத் தீர்மானித்து எருதுகளை இளைப்பாற வைத்துவிட்டு சமையல் செய்வதற்காக அங்கு கிடைத்த சுண்டைக்காய்களை அங்கிருந்து ஒரு கல்லின் மீது வைத்து நசுக்கினாராம்.
அப்போது எனக்கு கல்லடிப்பட்டு தலை நோகிறது. உன்னிடம் இருக்கும் மிளகு கொஞ்சம் எடுத்து என் தலைக்கு பற்றுப்போடு என அசரீரியாக ஒரு குரல் கேட்டதாம். அதற்கு அவர் ஏதும் விளங்காமல் என்னிடம் மிளகு எது? உளுந்துதானே...இவ்வூருக்கு அருகாமையில் வசித்து வந்த மாணிக்கம் செட்டி என்பவர் மிளகு வியாபாரம் செய்து வந்தார். மிளகுபொதிகளை எருதுகளின் மீது ஏற்றிக்கொண்டு வெளியூர் சென்று விற்று வருவது அவரது வழக்கம்.
அவ்வாறு ஒரு முறை மிளகுப் பொதிகளுடன் வரும்போது, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் மரங்களடர்ந்த காடாக இருந்ததாம். இரவுப்பொழுதாகி விட்டதால் இந்த இடத்தில் தங்கிச்செல்லத் தீர்மானித்து எருதுகளை இளைப்பாற வைத்துவிட்டு சமையல் செய்வதற்காக அங்கு கிடைத்த சுண்டைக்காய்களை அங்கிருந்து ஒரு கல்லின் மீது வைத்து நசுக்கினாராம்.
அப்போது எனக்கு கல்லடிப்பட்டு தலை நோகிறது. உன்னிடம் இருக்கும் மிளகு கொஞ்சம் எடுத்து என் தலைக்கு பற்றுப்போடு என அசரீரியாக ஒரு குரல் கேட்டதாம். அதற்கு அவர் ஏதும் விளங்காமல் என்னிடம் மிளகு எது? உளுந்துதானே இருக்கிறது எனக்கூறி தனது வேலைகளை முடித்துக் கொண்டு அடுத்த நாள் பிரயாணப்பட்டு வெகு தொலைவில் உள்ள ஒரு ஊருக்குச் சென்றார்.
அங்குள்ள சந்தையில் தனது மிளகு மூட்டைகளை அவிழ்த்துப்பார்க்க அவையனைத்தும் உளுந்தாக இருந்தனவாம் இது கண்ட அவர் வியந்து வருந்தி இறைவனைத் துதிக்க நீ சுண்டக்காய் நசுக்கிய இடத்தில் இருந்து மண் எடுத்து வந்து உளுந்தின் மீது தூவு என அசரீரிதியாகக் கேட்டதாம். அவரும் அவ்வாறே செய்ய உளுந்து அனைத்தும் மிளகா மாறிவிட்டனவாம்.
திரும்பும் வழியில் சுண்டைக்காய் நசுக்கிய இடத்தில் வந்து ஆராய்ந்து பார்க்க, அவ்விடத்தில் சுயம்புவாக வீற்றிருந்த லிங்கத்தைக் கண்டு இறைவனது அற்புத சக்தியை வியந்து போற்றி வணங்கி அவ்விடம் ஆலயம் எடுக்க விளைந்து தான்தோன்றிநாதர் ஆலய கருவறையை அவர் கட்டிவித்தார்.
ஆகவே அவரது பெயர் மிளகுச்செட்டி என்றும் மிளகு உளுந்தாக மாற்றிய இடம் உளுந்துபேட்டை என்றும் இன்றளவும் வழங்கி வருகிறது. கருவறையை மிளகுச்செட்டியாரும், கோவிலின் மற்ற விரிவாக்கப் பணிகளை பராந்தக சோழனும் கட்டினார்கள் என்று வரலாறு கூறுகிறது