இத்திருக்கோயில் அமைவிடம் பேளூரில் உள்ளது. ஆணைமடவு நீர்தேக்க திட்டம் திருக்கோயிலில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருக்கோயிலின் பின்புறம் வசிஸ்ட நநி உள்ளது. இத்திருக்கோயில் சைவம் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் மூலவர் சுவாமி சுயம்பு வடிவில் உள்ளார். இவ்வூருக்கு அருகாமையில் வசித்து வந்த மாணிக்கம் செட்டி என்பவர் மிளகு வியாபாரம் செய்து வந்தார். மிளகுபொதிகளை எருதுகளின் மீது ஏற்றிக்கொண்டு வெளியூர் சென்று விற்று வருவது அவரது வழக்கம். அவ்வாறு ஒரு முறை மிளகுப் பொதிகளுடன் வரும்போது, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் மரங்களடர்ந்த காடாக இருந்ததாம். இரவுப்பொழுதாகி விட்டதால் இந்த இடத்தில் தங்கிச்செல்லத் தீர்மானித்து எருதுகளை இளைப்பாற வைத்துவிட்டு சமையல் செய்வதற்காக அங்கு கிடைத்த சுண்டைக்காய்களை அங்கிருந்து ஒரு கல்லின் மீது வைத்து...