அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், காளிப்பட்டி - 637501, நாமக்கல் .
Arulmigu Kandhasamy Temple, Kalipatti - 637501, Namakkal District [TM004908]
×
Temple History
தல வரலாறு
பழனிக்குச் சென்று பழனியாண்டியை தரிசிப்பது பக்தர்களின் வாழ்வில் பொற்காலம் ஆகும் ஆனால் அந்த பழனியில் குடிகொண்ட கந்தனையே நேரில் காளிப்பட்டிக்கு எழுந்தருள செய்த பெருமை பூஜாரி லட்சுமணக் கவுண்டரைச்சாரும் . இவர் கொங்கு நாட்டின் பருத்திப்பள்ளி பகுதியில் வேந்தன் செல்வன் குலத்தில் உதித்தவர். தனது சிறு குடிசையில் காவடியை வைத்து தினமும் பூஜித்து வந்தார். வருடந்தோறும் தைப்பூச தினத்தில் பழனிக்கு பாதயாத்திரையாக காவடி சுமந்து சென்று சரவண பொய்கையில் நீராடி பெருமானை வணங்கிவருவதை வழக்கமாகத் கொண்டிருந்தார். அவ்வாறு ஒரு சமயம் அவர் முருகனை வணங்கி விட்டு நடந்த களைப்புதீர ஓய்வாக படுத்து உறங்கிய போது கந்தன் அவர் கனவில் தோன்றி அன்பானவனே உன் பக்தியை மெச்சினேன் இனிமேல் நீ சிரமத்துடன் இங்கு நடந்து...பழனிக்குச் சென்று பழனியாண்டியை தரிசிப்பது பக்தர்களின் வாழ்வில் பொற்காலம் ஆகும் ஆனால் அந்த பழனியில் குடிகொண்ட கந்தனையே நேரில் காளிப்பட்டிக்கு எழுந்தருள செய்த பெருமை பூஜாரி லட்சுமணக் கவுண்டரைச்சாரும் . இவர் கொங்கு நாட்டின் பருத்திப்பள்ளி பகுதியில் வேந்தன் செல்வன் குலத்தில் உதித்தவர். தனது சிறு குடிசையில் காவடியை வைத்து தினமும் பூஜித்து வந்தார். வருடந்தோறும் தைப்பூச தினத்தில் பழனிக்கு பாதயாத்திரையாக காவடி சுமந்து சென்று சரவண பொய்கையில் நீராடி பெருமானை வணங்கிவருவதை வழக்கமாகத் கொண்டிருந்தார். அவ்வாறு ஒரு சமயம் அவர் முருகனை வணங்கி விட்டு நடந்த களைப்புதீர ஓய்வாக படுத்து உறங்கிய போது கந்தன் அவர் கனவில் தோன்றி அன்பானவனே உன் பக்தியை மெச்சினேன் இனிமேல் நீ சிரமத்துடன் இங்கு நடந்து வர வேண்டாம் நானே நீ இருக்கும் இடத்திற்கு (காளிப்பட்டி) வந்து விடுகிறேன், என்று அருள்வாக்கு கூறும் சக்தியையும் வழங்கினான். அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்த பூஜாரி லட்சுமணக்கவுண்டர் தன் ஊர் வந்து தமது குடிசை முன் அமர்ந்து நாடி வரும் அடியவருக்கு அருள் பாலிக்கத் தொடங்கினார். அவரது வாக்கு ஒவ்வொன்றும் சத்திய வாக்காக அமைந்தது நாள்தோறும் பக்தர் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அங்கு திரண்டது .
கோயிலுக்கு ஒரு பர்லாங்கு தொலைவில் ஒரு கிழவியின் தோட்டத்தில் அழகிய பசுமாடு ஒன்று கன்றினை ஈன்றும் பால் இல்லாமல் வறண்டு இருந்தது. தோட்டக்காரர் இதுபற்றி பூஜாரி லட்சுமணக்கவுண்டரிடம் முறையிட்டார். அவர் பக்தர்கள் புடை சூழ மேளதாளத்துடன் அங்கு சென்று பசுவின் மடியில் விபூதியைத் தடவி ஒரு குடத்து வைத்து பால் கறக்க முற்பட்டார். உடனே அதிசயம் நிகழ்ந்தது கறக்க கறக்க குடம் குடமாக பால் வந்து கொண்டே இருந்தது. கூடியிருந்தவர்கள் காளிப்பட்டி கந்தனுக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டனர். அந்த பால் முழுவதையும் கந்தனுக்கு அபிஷேகம் செய்தனர். அது முதல் இக்கோயிலில் பால் அபிஷேகம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பாம்பினால் விஷம் தீண்டப் பெற்றோர் விஷம் நீங்க செல்வது இப்பொழுதும் நடைபெறும் அதிசயங்களில் ஒன்றாகும். இது போன்று இன்னும் பல வியத்தகு சம்பவங்கள் நடைப்பெற்ற தலம் காளிப்பட்டி ஆகும். முதன் முதலில் பூஜாரி காவடி வைத்து பூஜித்த குடிசை இடும்பன் சன்னதியாக உள்ளது. அங்கு அந்த காவடி வைக்கப்பட்டு இருவேளை பூஜை நடக்கிறது . ஆண்டில் ஒரு நாள் மட்டும் காவடியை 2 கல் தூரம் உள்ள திருமணிமுத்தாற்றிற்கு மேளதாளத்துடன் எடுத்துச் சென்று காவடி கலசத்தில் தீர்த்தம் எடுத்து வந்து பங்குனி உத்திரத்தன்று மூலவருக்கு அபிஷேகம் செய்கிறார்கள் மூலஸ்தானத்திற்கு நேர் எதிராக ஸ்தாபகரின் சமாதி உள்ளது. தலைமுறை தலைமுறையாக கோயிலை நிர்வாகித்து வருகிறார்கள் . 20.12.1973 முதல் திருக்கோயிலானது இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் உள்ளது.