Arulmigu Kala Bairavar Temple, Adhiyamankottai - 636807, Dharmapuri District [TM004912]
×
Temple History
புராண பின்புலம்
சங்ககாலச் சிறப்புகொண்ட தகடூர் எனப்படும் தருமபுரியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதியமான்கோட்டை கிராமம் ஆகும். கடையேழு வள்ளல்களில் ஒருவரான, வரலாற்றில் அழியாப்புகழ் பெற்ற அதியமான் நெடுமானஞ்சி மன்னரின் பெயரால் விளங்கும் இந்த ஊரில் தரைக்கோட்டை இருந்ததற்கான எச்சங்கள் இன்றைக்கும் மண்மேடுகளாக ஆங்காங்கே தென்படுகின்றன. இவ்வூரை அகழ்வாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இரும்பு காலத்தைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்ந்ததாகக் கூறுகின்றனர். கறுப்பு, சிவப்பு மண் கலங்களும் பானை ஓடுகளும் இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்டு அவற்றின் காலம் கி.மு-300 எனக் கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகு சிறப்பு வாய்ந்த அதியமான்கோட்டையில் அருள்மிகு காலபைரவர் திருக்கோயிலை அதியமான் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாக காலங்காலமாக இப்பிரதேச மக்களால் கூறப்பட்டு வருகிறது. ஔவைக்கு நெல்லிக்கனி...சங்ககாலச் சிறப்புகொண்ட தகடூர் எனப்படும் தருமபுரியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதியமான்கோட்டை கிராமம் ஆகும். கடையேழு வள்ளல்களில் ஒருவரான, வரலாற்றில் அழியாப்புகழ் பெற்ற அதியமான் நெடுமானஞ்சி மன்னரின் பெயரால் விளங்கும் இந்த ஊரில் தரைக்கோட்டை இருந்ததற்கான எச்சங்கள் இன்றைக்கும் மண்மேடுகளாக ஆங்காங்கே தென்படுகின்றன. இவ்வூரை அகழ்வாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இரும்பு காலத்தைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்ந்ததாகக் கூறுகின்றனர். கறுப்பு, சிவப்பு மண் கலங்களும் பானை ஓடுகளும் இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்டு அவற்றின் காலம் கி.மு-300 எனக் கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகு சிறப்பு வாய்ந்த அதியமான்கோட்டையில் அருள்மிகு காலபைரவர் திருக்கோயிலை அதியமான் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாக காலங்காலமாக இப்பிரதேச மக்களால் கூறப்பட்டு வருகிறது. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்து அழியாப் புகழ்பெற்றான் மன்னன் அதியமான். மன்னரது புகழை வெறுத்த எதிரிகள் எப்போதும் அவருக்குத் தொல்லைக் கொடுத்து வந்தனர். இது குறித்து ஜோதிடர்களுடன் ஆலோசனை செய்த மன்னர், காசிக்குச் சென்று கல்லெடுத்து வந்து, காசியைப் போலவே சுடுகாட்டிற்கு அருகே காலபைரவருக்கு தனித்திருக்கோயிலாக இத்திருக்கோயிலை நிர்மாணித்ததாக இப்பகுதி மக்களால் காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. தென்இந்தியாவில் காலபைரவருக்கு தனித்திருக்கோயிலாக இத்தலம் இருப்பதால் தட்சிணகாசி ஷேத்திரம் என்றும் மூலவர் தட்சிணகாசி காலபைரவர் என்றும் அழைக்கப்படுகிறார்