அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், தருமபுரி நகரில் இருந்து நல்லம்பள்ளி வழியாக சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதியமான்கோட்டை என்ற கிராமத்தில் தெற்கு நோக்கிய திருக்கோயிலாக அமைந்துள்ளது. காசி நகரத்திற்கு அடுத்தப்படியாக, காலபைரவர் சுவாமிக்கென்று அமையப்பெற்ற பழமையான ஒரே தனித்திருக்கோயிலாக இத்திருக்கோயில் அறியப்படுகிறது. எனவேதான் பக்தர்களால் இக்கோயில் தட்சிணகாசி ஷேத்திரம் என்றும், தென்னகக்காசி திருத்தலம் என்றும் அழைக்கப்படுகின்றது. இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாக மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் சத்ரு சம்கார யாகம் நடைபெறுகிறது. இரவு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழித்திருந்து பூசணி தீபங்கள் ஏற்றியும் யாகபூஜையில் கலந்து கொண்டும் வழிபடுகின்றனர். இத்தல இறைவனை வழிபடுவதால் நவக்கிரக தோஷநிவர்த்தி, எதிரிகளின்...
06:00 AM IST - 12:00 PM IST | |
04:00 PM IST - 08:00 PM IST | |
12:00 PM IST - 04:00 PM IST | |
பிரதி செவ்வாய்தோறும் மாலை 3.00 மணி முதல் 8 மணி வரையிலும் பிரதி வியாழன் தோறும் பிற்பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை மற்றும் 04.00 மணி முதல் 08.00 மணி வரை தரிசனம் அனுமதிக்கப்படும் மாதாந்திர தேய்பிறை அஷ்டமியன்று காலை 06.00 மணி இரவு முழுவதும் திருக்கோயில் நடை திறந்திருக்கும் |