அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை - 600090, சென்னை .
Arulmigu Varasidhi Vinayagar Temple, Besant Nagar, Chennai - 600090, Chennai District [TM000523]
×
Temple History
தல வரலாறு
காணாபத்யம் என்னும் சமயம் கணபதியை முதன்மையாகக் கொண்டு வழிபடப்பட்டு வந்தது. அறுவகை சமயங்கள் ஒன்றினையும்போது அந்த அனைத்து சமயங்களுக்கும் முதன்மையாக அமைந்தது கணபதி என்னும் உருவ வழிபாடே ஆகும்.கணங்களுக்கு தலைவன் கணபதி. வினைகளை வேரறுப்பதால் விநாயகர். எடுத்த காரியங்கள் எவ்வித விக்னம் குறைவு இன்றி நடக்க அருள்புரிபவர் விக்னேசுவரர் என அழைக்கப்படுகிறார். சைவமும் வைணவமும் சாக்தமும் இவரை உறவுமுறை ஆக்கிக் கொண்டனர். சிவனுக்கு மகன் ஆவான். திருமாலுக்கு மருமகன் ஆனான். முருகனுக்கு அண்ணன் ஆனான். பார்வதி படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. சூரியன் தோழன் ஆனார். இத்தகைய சிறப்பு பெற்ற கணபதி விநாயகர் விக்னேசுவரர் வணங்கியவர்களுக்கு குறை தீர்ப்பவராகவும்...காணாபத்யம் என்னும் சமயம் கணபதியை முதன்மையாகக் கொண்டு வழிபடப்பட்டு வந்தது. அறுவகை சமயங்கள் ஒன்றினையும்போது அந்த அனைத்து சமயங்களுக்கும் முதன்மையாக அமைந்தது கணபதி என்னும் உருவ வழிபாடே ஆகும்.கணங்களுக்கு தலைவன் கணபதி. வினைகளை வேரறுப்பதால் விநாயகர். எடுத்த காரியங்கள் எவ்வித விக்னம் குறைவு இன்றி நடக்க அருள்புரிபவர் விக்னேசுவரர் என அழைக்கப்படுகிறார். சைவமும் வைணவமும் சாக்தமும் இவரை உறவுமுறை ஆக்கிக் கொண்டனர். சிவனுக்கு மகன் ஆவான். திருமாலுக்கு மருமகன் ஆனான். முருகனுக்கு அண்ணன் ஆனான். பார்வதி படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. சூரியன் தோழன் ஆனார். இத்தகைய சிறப்பு பெற்ற கணபதி விநாயகர் விக்னேசுவரர் வணங்கியவர்களுக்கு குறை தீர்ப்பவராகவும் அல்லல் போக்குபவராகவும் விளங்குகிறார். சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமில்லாமல் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களும் எந்த பணி தொடங்குவதற்கு முன்பும் எங்கும் வெளியே செல்வதற்கு முன்பாகவும் சீரும் சிறப்பும் மிக்க அருள்மிகு வரசித்தி விநாயகர் என பெயர் பெற்ற விநாயகரை வணங்கியே செயல்படுவது வழக்கம்.