


தல பெருமை


தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரில் ஆயிரம் விளக்கு பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி உத்தண்டிச் சாவடி எனப் பெயர் கொண்டிருந்தது எனத் தெரிய வருகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு துர்க்கையம்மனும் இரத்தினவிநாயகர் பெருமானும் மிக்க அருள் சக்தி வாய்ந்தவர்கள். இரத்தின விநாயகர் பெயர்க்காரணம்: இரத்தின என்ற சொல்லுக்கு நவரத்தின கற்கள் குறிக்கும் விநாயகர் எனவும், நவகிரக தோஷம் நிவர்த்தி செய்யும் விநாயகர் எனவும், மேலும் நவசக்தி அருள் பாலிக்கும் விநாயகர் எனவும் அவைகள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, தியாக சக்தி,...தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரில் ஆயிரம் விளக்கு பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி உத்தண்டிச் சாவடி எனப் பெயர் கொண்டிருந்தது எனத் தெரிய வருகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு துர்க்கையம்மனும் இரத்தினவிநாயகர் பெருமானும் மிக்க அருள் சக்தி வாய்ந்தவர்கள். இரத்தின விநாயகர் பெயர்க்காரணம்: இரத்தின என்ற சொல்லுக்கு நவரத்தின கற்கள் குறிக்கும் விநாயகர் எனவும், நவகிரக தோஷம் நிவர்த்தி செய்யும் விநாயகர் எனவும், மேலும் நவசக்தி அருள் பாலிக்கும் விநாயகர் எனவும் அவைகள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, தியாக சக்தி, பிரம்ம சக்தி, வாயு சக்தி, நவசக்தி, அக்னி சக்தி, குபேர சக்தி ஆகும். இவரை வணங்கினால் நவகிரக தோஷம், ராகு தோஷம், சனி தோஷம் நீங்கி கால சௌபாக்யத்துடன் வாழலாம் என்பது ஐதீகம். திருக்கோயில் புராணம்: சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியின் சமீபத்தில் ஒரு சாவடி இருந்நதாகவும், அந்தச் சாவடிக்கு உத்தண்டிச்சாவடி எனப் பெயரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. உத்தண்டிச் சாவடிக்கு சொந்தக்காரர் திரு. வையாயபுரி முதலியார் என்பவர். இவர் நுங்கம்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வந்தார், திருமணமாகி வெகுநாட்களாகியும் இவருக்கு மகப்பேறு கிட்டவில்லை. இந்த சாவடி பல வழிப்போக்கர்களுக்கும், பயணிகளுக்கும் தங்கிச் செல்ல நல்ல வசதியாக இருந்தது. எனவே பயணிகளும், வழிபோக்கர்களும் இங்கு வந்து தங்கி இளைப்பாறி செல்வார்களாம். திரு. உத்தண்டி முதலியார் அவர்கள் நல்ல செல்வந்தர், தெளிந்த உள்ளமும் நல்ல தெய்வ பக்தியும் கொண்டவர். இவரும் திருமணமாகி வெகுநாட்களாகியும் மக்கட்பேறு இன்றி வருந்தி இருந்தாராம். திரு. உத்தண்டி முதலியார் அவர்கள் மகப்பேறு வேண்டி தனது மனைவியுடன் பல தலங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது வழக்கமாம். எப்போதும் இந்த சாவடியில் வந்து தங்கி இளைப்பாறிக் கொண்டு போவது வழக்கமாம். உத்தண்டி முதலியார் இந்தச் சாவடிக்கு அடிக்கடி வந்து தங்குவதால் இந்தபேட்டை வாசிகளுக்கு பழக்கமானவராகி விட்டார். இங்குள்ள மக்களும் இவரைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு சமயம் உத்தண்டி முதலியார் தனது துணைவியாருடன், குழந்தைப் பேறு வேண்டி இராமேஸ்வரம் சென்று பிரார்த்தித்துக் கொண்டு சென்னைக்கு வந்து வழக்கம்போல் இங்குள்ள சாவடியில் சமையல் செய்து சாப்பிடத் தங்கினாராம். அந்த சமயம் அவருடன் துணையாக வந்திருந்த ஒருவரின் பேரில் அன்னையின் அருள் ஆவேசம் வந்து உத்தண்டி முதலியாரிடம் சாவடியின் அருகில் ஒரு பனைமரத்தினடியில் நான் இருக்கிறேன் எனக்கு ஒரு ஆலயம் அமைத்து பூஜை செய்து வா, நீ மகப்பேறு பெற்று மகிழ்வாய் என அருள் வாக்கு அளித்தாள் அன்னை. மட்டில்லா மகிழ்ச்சி கொண்டு மரத்தினடியில் தோண்டி பாக்கவும் அங்கிருந்து ஒரு சுயம்பு அம்மன் வெளியே வந்தாள். அம்மனைக் கண்டு ஆனந்தம் கொண்ட உத்தண்டி முதலியார் அந்த பனைமரத்தின் அருகிலேயே ஒரு ஓலை கொட்டகை அமைத்து அதில் அம்மனை பிரதிஷ்ட்டை செய்து பூசை செய்து வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு சமயம் உத்தண்டி முதலியார் இந்த நிலத்திற்கு சொந்தக்காரரான திரு. வையாபுரி முதலியாரிடம் தனக்கு அம்மனின் அருள் வாக்கு கிடைத்த வரலாற்றையும் அதன் காரணமாக அம்மன் ஓலைக் கொட்டகையில் அமர்ந்த வரலாற்றையும் கூறி அதே இடத்தில் தான் அம்மனுக்கு கோயில் கட்ட உத்தேசித்துள்ளதாக தமது விருப்பத்தையும் எடுத்துரைத்தாராம். தனது சொந்த இடத்தில் அன்னை நித்திய வாசம் செய்து வருவதையும், அந்த அம்பிகைக்கு உத்தண்டி முதலியார் கோயில் கட்ட விரும்புவதையும் கேள்வியுற்ற வையாபுரி முதலியார் ஆனந்த பரவசமடைந்து உத்தண்டி முதலியாரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு உடனே சாவடியின் அருகிலுள்ள ஒற்றை பனைமரத்தைச் சுற்றியுள்ள இடத்தை கோயில் கட்ட தானமாகக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. வையாபுரி முதலியாரிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில் முதன் முதலில் உத்தண்டி முதலியார் சாவடியின் அருகில் ஒரு விநாயகரை பிரதிஷ்ட்டை செய்து கோயிலொன்றை அமைத்தார் என்று அதுவே தற்போது ஒயிட்ஸ் சாலையில் ஓரத்திலிருக்கும் இரத்தின விநாயகர் ஆலயம் என்று கூறப்படுகிறது. விநாயகர் ஆலயத்துக்கு வலது புறத்தில் அதாவது ஒற்றைப் பனைமரத்துக்கு அருகில் சிறிய கோயில் கட்டி அதில் சுயம்பு அம்மனை பிரதிஷ்ட்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கோயிலின் வளர்ச்சிக்காகவும், பராமரிப்புக்காகவும் ஏற்பாடுகள் செய்ததாக தெரிய வருகிறது. இதனால் ஊர் மக்கள் உத்தண்டி முதலியாரை மிகவும் கௌரவித்தார்கள். கோயிலுக்கு பூர்ண ஆதரவு கொடுத்தார்கள். காரணம் இதற்கு முன் இந்த பகுதியில் கோயில்கள் இல்லை. உத்தண்டி முதலியாருடைய இந்த சீறிய பணியைப் பாராட்டி மக்கள் இந்தச் சாவடியையும் அதன் சுற்றுப்புறத்தையும் உத்தண்டி முதலியாரின் பெயரை வைத்து உத்தண்டி சாவடி என்று அழைக்க தொடங்கினார்கள். அதன் பிறகு இக்கோயில் உத்தண்டி முதலியாரின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது. ஊர்மக்கள் அனைவரும் அம்மனின் மேல் தீவிர நம்பிக்கையும் பக்தியும் கொண்டு இருந்தார்கள். இந்த சமயம் உத்தண்டி முதலியாருக்கு அம்மனின் அருள் கிடைத்தது. அவர் மகப்பேறு பெற்றார். ஒரு குழுந்தைக்கு தந்தையாகி விட்டார் என்ற செய்தி தெரிந்து ஊர் மக்களுக்கு அன்னையின் மீது தீவிர நம்பிக்கை ஏற்பட்டது. துர்க்கையம்மன் சிறப்பு அம்சங்கள்: சென்னையில் துர்க்கைக்கு என்று தனியாக கோயில் அமைந்திருப்பது இத்திருத்தலமே. மேலும் மூலவர் துர்க்கை அம்மன் வடக்கு திசை நோக்கி இருப்பது தனிப்பட்ட சிறப்பாகும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் விளக்கேற்றி வழிப்பட்டால், மகப்பேறு உண்டாகும். திருமணத்தடைகள் நீங்கும், கஷ்டம் தீரும். பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, தசமி ஆகிய தினங்களில் வழிப்பட்டால் தடைப்பட்ட காரியங்கள் நீங்கி குடும்பத்தின் மகிழ்ச்சி பெறுகும். விசேஷ உற்சவங்கள்: ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நான்காவது வாரம் வியாழக்கிழமை ஆடி திருவிழா ஆரம்பித்து மூன்று நாட்கள் சிறப்பு அபிஷேகங்களும், நான்காவது நாள் ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து இரவு அம்மன் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. ஆடி பூரம் அன்று அருள்மிகு துர்க்கையம்மனுக்கு 108 குத்து விளக்கு பூஜை நடைபெறும். ஆவணி திருவோண நஷ்ட்சத்திரத்தில் ஏகதின இலட்சார்ச்சனை அருள்மிக துர்க்கையம்மனுக்கு நடைபெறுகிறது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு வெள்ளி கசவம் அணிவிக்கப்படும். அன்று இரவு இரத்தின விநாயகர் சகல புஷ்ப அலங்காரத்துடன், மேளவாத்தியங்களுடன் திருவீதி உலா நடைபெறும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவம் 9 நாட்கள் சிறப்பு அபிஷேகம் செய்து புஷ்ப அலங்காரம் செய்து வருகின்றனர். அருள்மிகு துர்க்கைக்கு மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்துடன், மேளவாதியங்களுடன் திருவீதி புறப்பாடு வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஏனைய சன்னதிகள்: அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதி: மூலவர் துர்க்கையம்மனுக்கு இடது பக்கத்தில் வள்ளி தேவசேன சுப்பிரமணி சுவாமி சன்னத மிகவும் அழகாகவும், கம்பீரமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுப்பிரமணியருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி அன்று ஏகதின லட்சார்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்று அதனை தொடர்ந்து இரவு திருவீதி புறப்பாடும, மறுநாள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்று வருகிறது. முரக டிபருமானை வளர்பிறை தேய்பிறை, சஷ்டி திதிகளிலும், ஒவ்வொரு மாதம் கிருத்திகை நஷ்சத்திரம், செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வந்தால் புத்திர பாக்கியம்பெறவும் வேலை கிடைக்கவும் செவ்வாய் தோஷம் நீங்க இங்கஙளள முருகர் வர பிரசாதியாக விளங்குகின்றார். மேலும் திருக்கோயில் அருசில் ஐயப்பன் சன்னதி உள்ளது. பீடாரி அம்மன் சன்னதி: பிரதி அமாவசை, பௌர்ணமி, வளர்பிறை, அண்டமி, தசமி நாட்களில் பீடாரி அம்மனை வழிப்பட்டால் சகல தோஷங்கள், பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி பெறலாம். கிராம தேவதையாக பீடாரி அம்மன் விளங்குவதால் முதலில் கிராம தேவதைக்கு படயல் வைத்து விட்டு மற்ற காரியங்களை ஆரம்பிக்கப்படுவது நன்மை பெயக்கும். இராயப்பேட்டை வாசிகளுக்கு கிராம தேவதையாக கோயில் கொண்டிருப்பது இத்திருத்தில் அமைந்துள்ள பீடாரி அம்மனை ஆகும். சப்த கன்னிமார்கள்: அருள்மிகு துர்க்கையம்மன் சன்னதிக்கு பின்புறத்தில் சப்தகன்னிமார்கள் சன்னதி அமைந்துள்ளது. பஞ்சமி, சஷ்டி, அஷ்டமி, நவமி, தசமி, திதிகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நமது கஷ்டங்கள் நீங்கும். எதிரிகள் விலகி செய்வார். மகப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண யோயகம் அமையும். நாகலிங்கம்: அருள்மிகு துர்க்கையம்மன் சன்னதிக்கு வலது புறத்தில் நாகலிங்க சன்னதி அமைந்துள்ளது. நாகலிங்கத்தை பிரதோஷ தினங்களில் வழிப்பட்டால் திருமணத்தைடைகள், நாகதோஷம் நீங்கும். பெண்கள் வாலுற்றி வழிபட்டால் திமண தோஷம் நீங்கி மாங்கல்யபாக்கியம் கை கூடும். விஷேசமாக நாக சதுர்த்தி அன்று நாகலிங்கத்தை வழிபடுவது நிறைந்த பலனை அளிக்கும். அண்ணன்மார் கன்னியமார்கள் சன்னதி: அருள்மிகு துர்க்கையம்மன் சன்னதியின் வலது புறரத்தில் பீடாரி அம்மன் சன்னதியின் இடது புறத்தில் அண்ணன்மார், கன்னிமார் சன்னதிகள் அமைந்துள்ளன. இவர்களை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சகோதரர், சகோதரிகள் அன்பு நீடிக்கும். நவகிர சன்னதி: பீடாரி அம்மன் சன்னதியின் வலது புறத்தில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது. ராகு, கேது, குரு,சனி பெயர்ச்சிகள் மாறும்போது சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்து வந்தால் தோஷம் நிவர்த்தி ஆகும். சனி கிழமைகளில் வள்ளு தீபம் ஏற்றி வழிபட்டால் தடைகள் நீங்கும். மேலும் இத்திருக்கோயிலில் ஐயப்பன் சன்னதி உள்ளது.
