அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், பரங்கிமலை, சென்னை - 600016, சென்னை .
Arulmigu Kasiwishvanathan Temple, Paraigimalai, Chennai - 600016, Chennai District [TM000008]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு
தமிழ்நாடு திருக்கோயில்கள் நிறைந்த திருநாடு. வானவளாவில் கோபுரங்கள் உலகிற்கே ஒரு புதுமை தமிழ் நாகரீகத்தின் சின்னங்கள், வற்றாத கலை ஊற்றுக்ள் கலையுலகத்திற்கு தமிழர் அளித்த கலைக்கொடைகள், கோயில், கோவில், கோஇறை, இல் தங்கும் இடம். ஆக கோயில் என்பது இறை தங்கும் இடமாகும். கோயிலை ஆலயம் என்றும் அழைப்பர்.
ஆலயம் என்பதை ஆ லயம் என்று பிரிக்கலாம் ஆ என்றால் ஆன்மா என்பது பொருள். லயம் என்றால் சேருவதற்கு உரிய இடம் (லயித்தல்) எனப் பொருளாகும். இப்பொருள்படி கடவுளது திருவடியில் ஆன்மா சேருவதற்குரிய அதாவது லயிப்பதற்குரிய இடம் எனப் பொருள் கொள்ளலாம்.
நிலத்தடியில் நீர் எங்கும் நிறைந்திருந்தாலும் ஒரு கிணறு வெட்டி...அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு
தமிழ்நாடு திருக்கோயில்கள் நிறைந்த திருநாடு. வானவளாவில் கோபுரங்கள் உலகிற்கே ஒரு புதுமை தமிழ் நாகரீகத்தின் சின்னங்கள், வற்றாத கலை ஊற்றுக்ள் கலையுலகத்திற்கு தமிழர் அளித்த கலைக்கொடைகள், கோயில், கோவில், கோஇறை, இல் தங்கும் இடம். ஆக கோயில் என்பது இறை தங்கும் இடமாகும். கோயிலை ஆலயம் என்றும் அழைப்பர்.
ஆலயம் என்பதை ஆ லயம் என்று பிரிக்கலாம் ஆ என்றால் ஆன்மா என்பது பொருள். லயம் என்றால் சேருவதற்கு உரிய இடம் (லயித்தல்) எனப் பொருளாகும். இப்பொருள்படி கடவுளது திருவடியில் ஆன்மா சேருவதற்குரிய அதாவது லயிப்பதற்குரிய இடம் எனப் பொருள் கொள்ளலாம்.
நிலத்தடியில் நீர் எங்கும் நிறைந்திருந்தாலும் ஒரு கிணறு வெட்டி அதன் மூலமே நீரைப் பெற முடியும். பசு உடம்பெல்லாம் பால் வியாபித்திருத்தாலும், அதன் மடி வழியாகத்தான் நமக்கு பால் கிடைக்கிறது, இவைகளை போல் இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் திருக்கோயில்களில் உள்ள மூர்த்திகளின் வழியாகவே பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றான். எனவே தான் நம் ஆனறோர்கள் ஆலயம் தொழுவது சாலவும் நன்று கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எழுதி வைத்தவர்.
ஆலயம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிவாலயங்கள்.
மண்ணிணிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர்நல் விழாப் பொலிவுகண்டார்தல்
உண்மையாம் எனில் உலகர்முன் வருகென உரைப்பார்
( திருஞான சம்பந்தர் புராணம் -1087)
எல்லோரும் பக்திப் பூண்டொழுகும் சிவனடியாராக வாழ்தலும், சிவனடியார்களுக்கு
எல்லோரும் பக்திப் பூண்டொழுகும் சிவனடியாராக வாழ்தலும், சிவனடியார்களுக்கு அன்னம் பாலிப்பு மகேசுவரப் பூஜை புரிதலும் சிவபெருமான் திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்தலுமே மண்ணில் பிறந்தார் பெறத்தக்க மாண்பயன் என்பதை இத்திருப்பதிகம் தெளிவுப்படுத்துகின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றுதான் முற்காலத்தில் பிருங்கி மாநகர் என வழங்கிய இக்கால பரங்கிமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம்.
பெயர் காரணம்
புராண காலத்தில் வாழ்ந்து வந்த பிருங்கி மாமுனிவர் காசியிலிருந்து தென்திசை நாடுகளுக்கு புனிதப் பயணம் செய்யும் காலத்தல் இவ்வூரில் உள்ள மலையில் சில காலம் வாழ்ந்து, இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சிவபெவருமானை வழிபட்டு முக்தியடைந்தார். எனவே, அவர் வாழ்ந்த மலை பிருங்கி மலை எனவும் அதை சுற்றியுள்ள ஊர் பிருங்கி மாநகர் எனவும் வழங்கப்பட்டது. பிற்காலத்தில் இவ்வூரில் பரங்கியர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தபடியால் பிருங்கி மலை என்பது பெயர் மருவி பரங்கி மலை என்று அழைக்கப்பட்டுவருகிறது.
அருள்மிகு காசி விஸ்வநாதர் எழுந்தருளியிருக்கும் சிவாலய தோன்றிய வரலாறு
சிவன் சிறப்பிற்குச் சின்னமே சிவலிங்கமாகும். தானே தோன்றியது ஸ்வயம்புலிங்கம் எனப்படும். தேவராலும், முனிவராலும், அசுரராலும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை பல. சிவாலயம் அமையும் இடம் ஊரின் நடுமையம் அல்லது அந்த ஊரின் கோடியாகயிருக்கும். ஏனெனில், பழமையான சிவன் கோயில்கள் பல மகான்கள், தேவரிஷிகள், சிவனடியார்கள் போன்றோரின் ஜீவசமாதியில் அமையும் என்பது மரபு. இத்திருக்கோயில் புராண காலத்தில் வாழ்ந்த பிருங்கி மாமுனிவரின் ஜீவசமாதியில் அவர் நினைவாக அமைக்கப்பட்டதாகும்.
பிருங்கி மாமுனிவர்
புராணகாலத்தில் வாழ்ந்த இப்பிருங்கி மாமுனிவர் சிறந்த சிவபக்தர், சிவனை மட்டுமே நாள்தோறும் தவறாது வணங்கி வழிபட்டு வந்தார். சிவபெருமானும் இவரது பக்திக்கு மெச்சி அவரை சோதனை செய்ய திருவுளம் கொண்டார்.
ஒருநாள் பிருங்கி முனிவர் தம்மை (சிவனை) வழிபடும்போது அவருக்கு பார்வதி, பரமேஸ்வரனாய் காட்சி அளித்தார். அதனைக் கண்டு திகைத்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் எப்படி வழிபடுவது என யோசித்து ஒரு வண்டாக மாறி, அம்மை அப்பருக்கு நடுவில் சென்று சிவனை மட்டும் வணங்கி வழிபட்டார்.
ஈசனின் லீலைகளில் இதுவும் ஒன்று என்பதை உணர்ந்த உமையும், முனிவரிடம் எண்ணையும் சேர்த்து விழபடாமல் எனக்கும், ஈஸ்வரனுக்கும் நடுவில் வந்து அவரை மட்டும் வழிபட்டு என்னை புறக்கணித்தால், உன் உடலில் உள்ள சக்தி அனைத்தையும் நான் எடுத்து விடுகிறேன். பிறகு நீ எப்படி அவரை வழிபடுவாய் என்று கூறி, அவர் உடலில் உள்ள சக்தி அனைத்தையும் எடுத்துக் கொண்டார்.
அப்போது முனிவர் நிற்பதற்கும் சக்தி இன்றி எலும்புகூடாக நின்று சிவனை நோக்கி இறைவா என்ன சோதனை இது ? நான் கீழே விழுந்து விடுவேன் போல் உள்ளதே இனி உன்னை எவ்வாறு வணங்குவேன் ? என உள்ளம் உருக வேண்டினார். அது கண்டு சிவபெருமானும் அவருக்கு மூன்றாவது ஒரு காலை கொடுத்து அவர் எழுந்து நிற்க உதவி செய்தார். அவர் பக்திக்கு மெச்சி பின்னர் ரிஷபாரூடராய் காட்சியளித்து அவருக்கு முக்தி அருளினார்.
தனிச்சிறப்பு
பிருங்கி முனிவருக்கு தம்பதி சமேதராய் காட்சியளித்தது போலவே, இன்றும் மூலவருக்குப் பின்னால் பார்வதி பரமேஸ்வரனாய் காஞ்சித் திருத்தலத்தில் உள்ளது போல் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
கோவில் அமைப்பு
வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கும் வல்லமையுடையவராய் அருள்மிகு காசி விஸ்வநாதர் கிழக்கு முகமாக கருவறையில் காட்சி அளிக்கின்றார். கருணையே வடிவாக, கற்பகத் தருவாக காசி விசாலாட்சி அம்மையார் ஈசனின் இடப்பாகத்தில் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள் மழை பொழிகின்றார்.
கஷ்டங்கள் தீர்க்கும் மஹா கணபதியும், வல்வினைகள் போக்கும் வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியரும் ஈசனின் வலம், இடமாக தனி சன்னதியில் கொலுவீற்றிருக்கின்றனர்.
ஈசனின் நேரடிப் பார்வையில் சூரியனும், சந்திரனும், கால பைரவரும் மற்றம் சமயக் குரவர்களாம், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.
கோவிலின் பின்புறம் அரச மரமும், வேப்ப மரமும் இணைந்து ஒருமரமாய் காட்சியளிக்கிறது. திருமணமாகாதவர்களுக்க திருமணம் தடையின்றி நடைபெறவும் பிள்ளை பேரின்றி வாடுவோர் மக்கட்பேறு பெறும் வரத்தையும் இகு வீற்றிருக்கும் பளிள்யைர் வழங்கியருளுகிறார்.
மேலும் பஞ்சகோஷ்டத்தில் நர்த்தன கணபதி, கல்வி கடவுள் தட்சிணாமூர்த்தி, காக்கும் கடவுள் ஸ்ரீ மஹாவிஷ்ணு, படைப்புக் கடவுள் பிரம்மா, மங்கலங்கள் தரும் ஸ்ரீ துர்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சகல தோஷங்களையும் நீக்கும் நவக்கிரகங்களும் தனி சன்னதியில் ஆக விதிப்படியும் வாஸ்து சாஸ்திரபடியும் இத்திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன.