வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கும் வல்லமையுடையவராய் அருள்மிகு காசி விஸ்வநாதர் கிழக்கு முகமாக கருவறையில் காட்சி அளிக்கின்றார். கருணையே வடிவாக, கற்பகத் தருவாக காசி விசாலாட்சி அம்மையார் ஈசனின் இடப்பாகத்தில் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள் மழை பொழிகின்றார். கஷ்டங்கள் தீர்க்கும் மஹா கணபதியும், வல்வினைகள் போக்கும் வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியரும் ஈசனின் வலம், இடமாக தனி சன்னதியில் கொலுவீற்றிருக்கின்றனர். ஈசனின் நேரடிப் பார்வையில் சூரியனும், சந்திரனும், கால பைரவரும் மற்றம் சமயக் குரவர்களாம், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். கோவிலின் பின்புறம் அரச மரமும், வேப்ப மரமும் இணைந்து ஒருமரமாய் காட்சியளிக்கிறது. திருமணமாகாதவர்களுக்க திருமணம் தடையின்றி நடைபெறவும் பிள்ளை பேரின்றி வாடுவோர் மக்கட்பேறு...