அருள்மிகு சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை - 600049, சென்னை .
Arulmigu Sowmya Damodhara Perumal Temple, Villivakkam, Chennai - 600049, Chennai District [TM000096]
×
Temple History
தல வரலாறு
சப்தரிஷிகள் - 1, வஸிஷ்டர், 2. காஷ்யபர், 3. அத்ரி, 4. ஜமத்கனி, 5. கௌதமர், 6. விஸ்வாமித்திரர், 7. பரத்வாஜர் இவர்களில் அத்ரி மஹரிஷி குமாரர் துர்வாச முனிவருக்கும், சூரபத்மன் தங்கை அசுமுகிக்கும் பிறந்த வில்வலன், வாதாபி இருவரையும் (ஸ்காந்த புராணம்) ஞான மார்க்கத்தில் வளர்க்க தந்தை விரும்பினார். வில்வலன் வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து வில் வா வில்வாக்கம் மருவி வில்லிவாக்கம் என உண்டானது. அசுரகுணம் படைத்த தாய் அதை விரும்பவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் குடும்பத்தை விட்டு காட்டிற்குச் சென்று விட்டார். இதன் காரணமாக ரிஷிகளை பழிவாங்கும் படி தன் பிள்ளைகளுக்குத் தாய் கட்டளையிட்டாள். அதன்படியே அண்ணனும், தம்பியும் சிவ பக்தர்களைப் போல வேடம் கொண்டு...சப்தரிஷிகள் - 1, வஸிஷ்டர், 2. காஷ்யபர், 3. அத்ரி, 4. ஜமத்கனி, 5. கௌதமர், 6. விஸ்வாமித்திரர், 7. பரத்வாஜர் இவர்களில் அத்ரி மஹரிஷி குமாரர் துர்வாச முனிவருக்கும், சூரபத்மன் தங்கை அசுமுகிக்கும் பிறந்த வில்வலன், வாதாபி இருவரையும் (ஸ்காந்த புராணம்) ஞான மார்க்கத்தில் வளர்க்க தந்தை விரும்பினார். வில்வலன் வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து வில் வா வில்வாக்கம் மருவி வில்லிவாக்கம் என உண்டானது. அசுரகுணம் படைத்த தாய் அதை விரும்பவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் குடும்பத்தை விட்டு காட்டிற்குச் சென்று விட்டார். இதன் காரணமாக ரிஷிகளை பழிவாங்கும் படி தன் பிள்ளைகளுக்குத் தாய் கட்டளையிட்டாள். அதன்படியே அண்ணனும், தம்பியும் சிவ பக்தர்களைப் போல வேடம் கொண்டு அவ்வழியே வரும் முனிவர்களை விருந்திற்குச் சாப்பிட அழைத்து மாய சக்தியால் தன் தம்பியை உணவாகச் சமைத்து விருந்து உபசரித்து சாப்பிட்டு முடிந்ததும் - வாதாபி வெளியே தாவி வா - என்று அண்ணன் கூறியதும் ரிஷியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தம்பி வெளியே தாவி குதிப்பான். உடனே ரிஷிகள் இறந்து விடுவார்கள். இதனால் முனிவர்கள் பயம் கொண்டு சிவனிடம் சென்று முறையிட்டனர். அகத்திய மகரிஷி சமீபத்தில் பூலோகம் வரும் பொழுது இதற்கு ஒரு முடிவு ஏற்படும் என்று சிவன் ஆசிர்வதித்தார். சில காலம் கழித்து பூலோகத்தில் தென்திசை வழியாக ஸ்ரீ அகத்தியர் வந்த போது வில்வாரண்யத்தில் ரிஷிகளுக்கு நடந்த கொடுமைகளைத் தன் ஞானத்தினால் அறிந்து கொண்டார். வழக்கம் போல வில்வலனும் வாதாபியும் ஸ்ரீ அகத்தியரை விருந்திற்கு அழைத்து உபசரித்தார்கள். முன்னதாகவே இந்தச் சூழ்ச்சியை அறிந்த அகத்தியர் விருந்து சாப்பிட்டதும் தன் மந்திர சக்தியால் வாதாபியைத் தன் வயிற்றிலே ஜீரணம் செய்து விட்டார். தாம்பூலம் தந்து உபசரித்த வில்வலன், வழக்கம் போல - வாதாபி வெளியே வா - என்றான். அகத்தியர் சிரித்துக் கொண்டு வயிற்றைத் தடவினார். தம்பியை வெளியே வரமுடியாதது கண்டு கோபங்கொண்டு வில்வலன் அகத்தியரைப் பலவிதமாகத் துன்புறுத்தினான். உடனே அகத்தியர் தன் இஷ்ட தெய்வம் முருகனையும் மற்றும் சிவனையும் விஷ்ணுவையும் பிரார்த்தனை செய்தார். சிவனும், விஷ்ணுவும் அனுமதி தர முருகப் பெருமான் மந்திரம் ஜெபித்து ஒரு அருகம் புல்லை அஸ்திரமாக விடும்படி அகத்தியருக்குக் கூறினார். அதன்படியே செய்து வில்வலனைச் சம்ஹாரம் செய்தார். ஏற்கனவே வாதாபியைத் தன் வயிற்றில் சம்ஹாரம் செய்த காரணத்தினாலும் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷ நிவர்த்திக்காகச் சிவனை அகத்தியர் வேண்டினார். வில்வ வனத்திலேயே அங்காரஹ தீர்த்த குளம் ஒன்றையும் வழிபட சிறிய (வெண்மையான) படிகலிங்கம் ஒன்றையும் அகத்தியருக்கு வழங்கி சிவபெருமான் அருள் செய்தார் நன்றி கூறிய அகத்தியர் - சுவாமி எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவ ஞாபகார்த்தமாக தாங்களும், விஷ்ணுவும் இந்த வில்வ வனத்திலேயே திருக்கோயில் கொண்டு பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பணிந்து நின்றார். அதன்படியே சிவபெருமான் ஸ்ரீ அகத்தீஸ்வர ஸ்வாமியாகவும் (அர்த்த நாரீஸ்வர வடிவத்தில் பார்வதி இடது பாகத்தில் பார்வதியின் சகோதரன் பரந்தாமனாகிய விஷ்ணு) ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாளாகவும் இத்திருப்பதியில் எழுந்தருளினார்கள் என்று வில்வாரண்ய ஸ்தல புராணம் கூறுகிறது. இதற்குச் சான்றாக வில்லிவாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கருவறையில் உள்ள சிவலிங்க திருவுருவம் அதே மாதிரியில் சிறு வடிவத்தில் பெருமாள் கோயில் மஹா மண்டபத்தில் இடப்புறத் துண் ஒன்றில் சிவன் அற்புதமாகக் காட்சி தருகிறார்.