அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயில், Idukampalayam - 641302, கோயம்புத்தூர் .
Arulmigu Hanumantharayar Temple, Idukampalayam - 641302, Coimbatore District [TM009779]
×
Temple History
தல வரலாறு
கோவை மாவட்டம். மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகை வழி(அஞ்சல்) இடுகம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயிலாகும். இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தளமாகும். மாமன்னர் கிருச்ண தேவராயருடைய குரு வியாசராயர் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிசுடை செய்யப்பட்ட அனுமந்தராயசுவாமி எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும் ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயரின் அழகிய தாமரை மலர் போன்ற இருகால்களிலும் தண்டையும் பாதசரங்களும் இடது கையில் சௌகந்திக மலரை தொடையின் மீது வைத்திருக்கிறார். இடுப்பில் குறுவாள் வாயின் இரு புறங்களிலும் இரு சிங்கப்பற்களுடன் கூடிய அழகிய முத்துப் பல்வரிசையும் புன்முறுவலுடன்கூடிய இதழ்களுடன் நீண்ட நாசியும் நீண்டு வளைந்த...கோவை மாவட்டம். மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகை வழி(அஞ்சல்) இடுகம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயிலாகும். இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தளமாகும். மாமன்னர் கிருச்ண தேவராயருடைய குரு வியாசராயர் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிசுடை செய்யப்பட்ட அனுமந்தராயசுவாமி எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும் ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயரின் அழகிய தாமரை மலர் போன்ற இருகால்களிலும் தண்டையும் பாதசரங்களும் இடது கையில் சௌகந்திக மலரை தொடையின் மீது வைத்திருக்கிறார். இடுப்பில் குறுவாள் வாயின் இரு புறங்களிலும் இரு சிங்கப்பற்களுடன் கூடிய அழகிய முத்துப் பல்வரிசையும் புன்முறுவலுடன்கூடிய இதழ்களுடன் நீண்ட நாசியும் நீண்டு வளைந்த புருவங்களுடன் கூடிய அகன்ற கண்களும் வலக்கை தலைக்கு மேலாகத் தூக்கி யாம் இருக்கு பயம் ஏன் - என்று அபயம் அளிக்கும் வலக்கையின் உள்ளங்கையில் சுதர்சன் சக்கரச்சின்னமும் பளிச்சிடுகிறது. வாலை வலது புறமாக தலைக்கு மேலாக பின்புறமாக துக்கி மங்கலமணி ஒசை எழுப்பிக்கொண்டிருக்கிறார், கனிவோடு நொக்கும் கருணை விழிகளுடன் காட்சி அளிக்கிறார். இத்திருகோயிலுக்கு வந்து செல்பவர்களுக்கு வேண்டிய காரியம் உடனடியாக நடைபெறும் குழந்தைபாக்கியம் திருமணத்தடை வீடு மனை பாக்கியம் போன்றவை வேண்டி வருகின்றனர்கள் வேண்டுதல் நடைபெற்றவுடன் சுவாமிக்கு அபிசேகம் வடைமாலை வெண்ணெய்காப்பு அலங்காரம் செந்துர அலங்காரம் முலநட்சத்திர ஹோம பூஜை போன்றவை செய்கின்றனர்கள். .இத்திருக்கோயில் கோவையிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும் அன்னுரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் சத்தியமங்கலத்திலுருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலும் மேட்டுப்பாளைத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தபால் நிலையம் கனரா வங்கி மற்றும் இதர வங்கிகள் மளிகை கடைகள் உணவகம் இதர அனைத்து வசதிகளும் 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறுமுகையில் உள்ளது, இத்திருக்கோயில் ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ளது தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றது. திருக்கோயில் அனைத்து தினங்களிலும் அதிகாலை 5.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8.00 மணிவரை நடை திறக்கப்பட்டு இருக்கும் திருக்கோயில் நடை அடைக்கும் வழக்கம் இல்லை, மதியம் தினசரி முதலமைச்சர் திட்டத்தின் படி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வரப்படுகின்றது.