தல வரலாறு
பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோயில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலில் முல்லைக் குரும்பர்களே அன்னையை முதன் முதலில் கல் மூங்கில்களால் உருவம் அமைத்து வழிபட்டனர். அதன் பிறகு சோலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இவ்வன்னைக்கு ஆலயம் கட்டி வழிபாடு நடத்தி வந்தார்கள். இங்கு பொக்காபுரம் மாரியம்மன் தன் சகோதரிகளுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார்கள். தற்பொழுது அன்னையின் அருளை பெற பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர்.