தல வரலாறு
சீதாதேவி அசோகவனத்தில் தரிசித்த அனுமன் ,இராமபிரான் அடையாளமாக கொடுத்த கணையாழியை தேவியிடம் அளித்து விஸ்வரூபத்தினை காட்டி மேன்மைபொருந்திய சூடாமணியை பெற்று துணியில் முடிந்து கொள்கிறார். வாயு குமாரன் திரும்பி வரும் போது அவரது திருமேனி நிழல் சோமந்துறை சித்தூர் பாலாற்று படுகையில் படிந்து உருகொண்டதாக தலச்சிறப்புகள் மற்றும் அன்னையை தேடிவந்த இராம பிரானின் திருப்பாதம் பதிந்த பாறை என்கின்ற ஒரு செவிவழிச் செய்தியும் நிலவுகின்றது.