பெண்தான் உலகின் வளர்ச்சிக்கும், வாழ்க்கைக்கும் காரணமானவள். ஆகவே சக்தியை முழுமுதற் பொருளாக வழிபடும் நிலை காலத்திற்கு முந்தையது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காலத்திற்கு எட்டாத காலத்திற்கு முன்னரே, கொற்றவை வழிபாடு சிறந்து விளங்கியது. சிறப்பாக கொங்கு நாடு சக்தி வழிபாட்டில் புகழ் பெற்றது.
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் காவல் தெய்வ மாக விளங்குவது மாரியம்மனே. அந்த வகையில், இந்த ஊரின் காவல் தெய்வமாக விளங்குவது குடலுருவி மாரியம்மன் ஆவாள் சூலுர் வரலாற்றுப் புகழ் கொண்ட பேரூர். சூரலூர் என்பது இதன் பழம் பெயர். சூரல் என்பதற்கு, நாணற் புதர்கள் அதிகம் உள்ள இடம் என்று கூறலாம். சூரல் பம்மிய கான்யாறு என்பது சங்க இலக்கியத் தொடர்.
அந்த வகையில் பழம் பெருமை கொண்ட இவ்வூரில் தேசிய...பெண்தான் உலகின் வளர்ச்சிக்கும், வாழ்க்கைக்கும் காரணமானவள். ஆகவே சக்தியை முழுமுதற் பொருளாக வழிபடும் நிலை காலத்திற்கு முந்தையது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காலத்திற்கு எட்டாத காலத்திற்கு முன்னரே, கொற்றவை வழிபாடு சிறந்து விளங்கியது. சிறப்பாக கொங்கு நாடு சக்தி வழிபாட்டில் புகழ் பெற்றது.
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் காவல் தெய்வ மாக விளங்குவது மாரியம்மனே. அந்த வகையில், இந்த ஊரின் காவல் தெய்வமாக விளங்குவது குடலுருவி மாரியம்மன் ஆவாள் சூலுர் வரலாற்றுப் புகழ் கொண்ட பேரூர். சூரலூர் என்பது இதன் பழம் பெயர். சூரல் என்பதற்கு, நாணற் புதர்கள் அதிகம் உள்ள இடம் என்று கூறலாம். சூரல் பம்மிய கான்யாறு என்பது சங்க இலக்கியத் தொடர்.
அந்த வகையில் பழம் பெருமை கொண்ட இவ்வூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இக் கோயில் அமைந்து உள்ளது. அழகு ஒழுகும் ஓவியமாக அம்பிகை இக்கோயில் மாரியம்மனாக எழுந்தருளியுள்ளாள்.
இவ்வூர் மக்களின் நலத்திற்கும், வளத்திற்கும், இந்த அம்பிகையே காரணம் என்று கருதுகிறார்கள். ஆகவே பக்தர்கள் இக்கோயிலை, செவ்வாய், வெள்ளி, மற்றும் அமாவாசை நாட்களில் அதிகம் வந்து வணங்குகிறர்கள் இத்திருக்கோயிலில் அம்பிகையின் உற்சவத் திரு மேனியும் உள்ளது. இத்திருக்கோயிலில் மூன்றுகால பூசைகளும் நடைபெறுகிறது. இத் திருக்கோயிலில் இதற்கு முன் 11-9-1992ல் திருக்குடமுழுக்கு நன்னீ ராட்டல் எனும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. இத் திருக்கோயிலுக்கு சொந்தமாக பொன். வெள்ளி ஆபரணங்கள் எதுவும் இல்லை.
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களில் உடல் நடமில்லாமல் இருப்பவர்கள், பில்லி சூனியம் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனிடம் கயிறு, வேப்பிலை மந்திரித்து பூசாரியிடம் பெற்றுக் கொண்டு வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நீண்டநெடுநாட்களாக நடைமுறையில் இருந்துவரும் செயலாகும்.
இத்திருக்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின்கீழ் கோவை, அவிநாசி சாலை, அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் செயல் அலுவலராகவும், திருப்பூர், அருள்மிகு விஸ்வேஸ்வரர்சுவாமி வீரராகவப்பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் தக்காராகவும் இருந்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான மூன்று கடைகள் உள்ளன. உண்டியல் வருமானம் வருகிறது.