மலைப்பகுதியான மஞ்சக்கம்பையில் அம்மன் கோயில் கட்டுவதற்காக மானிஹடா என்ற பகுதியில் மண் எடுக்கும் போது திடிரென சத்தம் கேட்டது,அந்த இடத்தில் 2 குகையும், ஒரு நாகராஜர் சிலையும் இருந்தது.பின் அந்த இடத்தில் நாகராஜருக்கும் கோயில் கட்ட குழி வெட்டிய போது பாறை ஒன்று இடையூறாக இருந்தது. அகற்றிய போது அதற்கடியில் நாகம் ஓன்று உயிரோடிருந்தது.இதையடுத்து அம்மனுக்கும் நகராஜருக்கும் திருக்கோயில் எழுப்பப்பட்டது.இயற்கை எழில் கொஞ்சும் இந்த திருக்கோயில் நீலகிரி மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.