ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வெங்கம்பூர் கிராமத்தில் அருள்மிகு வரதராஜபெருமாள் வகையறா திருக்கோயில்கள் அமைந்துள்ளது. கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வர சுவாமி வீரநாராயண பெருமாள் திருக்கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பிரார்த்தனை தலமாக அமைந்துள்ளது. அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலும், அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலும் ஒரே மதிற்சுவற்றினுள் அமைந்துள்ளது. இதன் மிக முக்கியமான சிறப்பாகும்.