ஈரோடு மாவட்டம் மற்றும் வட்டம், கள்ளுக்கடைமேடு கொல்லம்பாளையம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் சட்டப்பிரிவு 46-2ன் கீழ் பட்டியலில் சேர்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் உள்ள அம்மன் எதிர்மறை மற்றும் தீய சக்திகளுக்காகவும் உயர்ந்த வாழ்கைப்பாதையில் வெற்றிபெற வலிமைக்காவும் வணங்கப்படுகிறார். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டப்படுகிறது.