கோயிலோடு இணைந்த குடிகள் என்று மக்களை மதிப்பிட்டனர் மாண்புடைய சான்றோர்கள். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது தமிழகத்துப் பழமொழி. எனவே, ஊர்தோறும் திருக்கோயில்களை எடுப்பித்து இறைவனுக்கு முறையாக வழிபாடு நடத்தி வந்தனர் நமது சமயச் சான்றோர்கள். அவ்வாறு கொங்கு நாட்டின் ஈரோடு மாநகரில் காவிரியின் தென்பால் நீர்வளமும், நிலவளமும், செல்வச்சிறப்பும் பொருந்திய ஈரோடு சூரம்பட்டிவலசு தன்னில் எழில்மிகு காட்சி தரும் திருக்கோயில் தன்னில் எழுந்தருளியிருந்து வேண்டுவோர்க்கு வேண்டியதை தந்து அருள்பாலித்து வருகிறாள் அருள்மிகு சுயம்பு மாரியம்மன். இத்திருக்கோயிலில் மாரியம்மன் சுயம்பு வடிவத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஈரோடு மாநகர் மத்திய பகுதியில் சூரம்பட்டிவலசு பேருந்து நிறுத்தத்தின் எதிரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வருடம் தோறும் மார்கழி மாதத்தில் பொங்கல் மற்றும் கம்பம் திருவிழா மிக சிறப்பாக...