ஊஞ்சலூர் கிராமத்தை சார்ந்த காளிபாலையாம் என்ற ஊர் மக்கள் நூல் வியாபாரம் செய்து வந்தனர் அவர்களில் சிலர் பிரிந்து விவசாய தொழில் கொண்டு பரிசல் மூலம் ஆற்றை கடந்து தயிர் விற்று வந்தனர். ஒரு நாள் ஓடம் நாடு ஆற்றை கடந்து சென்ற போது ஒரு கல் அவர்கள் கூடையில் விழுந்தது அவர்கள் அதை ஆற்றில் எடுத்து போட்டனர். ஆற்றை கடந்து சென்று ஓய்வு எடுத்த போது மீண்டும் அதே கல் கூடையில் விழுந்தது.ஊர் மக்கள் ஏதோ தெய்வ செயல் என எண்ணினர். அன்று இரவு ஊர் மக்கள் கனவில் அம்மன் தோன்றி இந்த ஊஞ்சலூர்ல் தான் குடிகொள்ள போவதாக கூறினால். அன்று முதல் மக்கள் அம்மனை கோவில் கட்டி ...