ஈரோடு மாநகரில் பெரியார் நகரில், பொய்யேரிக்கரை வீதியில் அகன்ற பரப்பளவில் அருள்மிகு கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். சாலையை ஒட்டியவாறு இத்திருக்கோயில் காணப்பட்டாலும் சாலையிலிருந்து சற்று உள்ளே சென்றால்தான் கருவறையில் உள்ள கருப்பண்ணசுவாமியை தரிசிக்க முடியும். இயற்கை எழில்வாய்ந்த மரம் செடிகள் கொண்டு இத்திருக்கோயில் காணப்படுகின்றது. ஈரோடு நகர், பெரியார் நகர்வாழ் மக்களின் காவல் தெய்வமாக கருப்பண்ணசாமி திகழ்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு குலதெய்வமாக கருப்பண்ணசாமி உள்ளார். பழமையான கட்டடக்கலையோ, சிற்பக்கலையோ, தொல்லியல் சான்றுகளோ ஏதும் இத்திருக்கோயிலில் காணப்படவில்லை. ஓர் கிராமிய காவல்தெய்வமாக அருள்மிகு கருப்பண்ணசுவாமி வழிபாடு இருந்துவந்துள்ளது. கன்னிமார்கள் சிற்பங்கள் பழமையான பெண்தெய்வ வழிபாட்டை குறிப்பதாம். இருபினும் கன்னிமார்கள் சிற்பமும் அண்மைக்காலத்தவைகளே...