தமிழகத்தில் பழமையும் வளமையும் நிறைந்த கொங்கு நாட்டில் பெருமையுடையதும் வரலாற்றுச் சிறப்புடையதுமான திருக்கோவில்கள் பல உள்ளன. அவற்றில் பவானி வட்டம், ஒலகடம் அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக் கோயிலும் ஒன்று. மக்களின் பக்திப்பெருக்கால் இத்திருக்கோவிலில் திருவிழாக்களும், பண்டிகைகளும் சிறப்போடு தொன்றுதொட்டு நடைபெற்று வருவது பெருமைக்குரியதாகும். இத்திருக்கோவிலில் அருள்மிகு அக்கரைப்பட்டி முனியப்ப சாமி மூலவராக உள்ளார். திருக்கோயிலுக்கு கோபுரம் நிலையமோ கிடையாது. அருள்மிகு அக்கரைப்பட்டி முனியப்ப சுவாமி திருக்கோவிலுக்கு சித்திரை மாதம் முதல் புதன்கிழமை அன்று திருவிழா நடைபெறும் அன்று முதல் 15 நாட்கள் வரை திருவிழா தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழா அருள்மிகு சொக்கநாச்சி அம்மன் திருக்கோவிலுக்கு சார்ந்தே அமையும்.